அக்டோபர் 01
'இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப் பண்ணினார்'
ரோமர் 5:11
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காகச் சிலுவையில் சகல பாடுகளையும் சகித்து, நமக்கு நீதியுண்டாகப் பாவமன்னிப்பையும், நித்திய பாக்கியத்தையும் சம்பாதித்தார். அவர் பலியானது நம்முடைய பாவங்களுக்காகவும், சர்வ லோகத்தின் பாவத்திற்காகவுமே. அவர் செய்த அனைத்தும் நற்செய்தியாகச் சுவிசேஷங்களில் வேத புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. விசுவாசத்தினால் நாம் அதை ஏற்றுக்கொண்டு அதன்படி நடப்பதினால் சமாதானம் பெறுகிறோம். மனுக்குலத்திற்குத் தேவையானதை எல்லாம் அவர் கல்வாரியில் செய்து முடித்தார். இதை ஏற்றுக்கொள்ளாத எவரும் வாழ்வில் சமாதானம் அடைய முடியாது.
ஒவ்வொரு நாளும் இந்த ஒப்புரவாக்குதலில் நம்பிக்கை வைக்காமலிருந்தால் நம்மால் அவரோடு மகிழ்ச்சியாக நடக்க முடியாது. முன்னே நாம் அதைப் பெறாமலும், நம்பாமலும் இருந்தோம். இப்பொழுதோ இயேசுவின் கல்வாரி இரத்தத்தினால் அதைப் பெற்று இருக்கிறோம். முன்னே நாம் அதன் தன்மையையும், அருமையையும் அறியாமலிருந்தோம். இப்பொழுது அவர் அவற்றை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய இரக்கமே நமக்குத் தைரியம் கொடுக்கிறது. இயேசுவின் மரணம் நமக்கு வாழ்வு. நமது சமாதானம் அவரே. அவருடைய நீதியின் மேலும், மகத்துவத்தின் மேலும் நாம் நமது கண்களை வைத்துக்கொண்டேயிருக்கவேண்டும். இதை மறந்தால் நாம் சாத்தானால் அடிமைகளாக்கப்படுவோம். நமது குற்றங்கள் நம்மைக் கலங்கடிக்கும் போதும், பயம் நம்மை ஆள்கொள்ளும்போதும், நாம் அவருடைய கல்வாரிப் பலியை விசுவாசித்தால், பற்றிப்பிடித்தால், நாம் தைரியசாலிகளாகவும், நீதிமான்களாகவும் பாக்கியமுள்ள தேவ மைந்தர்களாகவும் இருப்போம்.
இயேசுவே, உம் பிராயச்சித்தம்
எவருக்கும் அருமையானதே
சிலுவையையே நித்தம் யாம்
கண்டு பற்றிக் கொள்வோம்.
October 01-2007
கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள் (சங்.119:1-2)
- sujanthini
- Moderator
- Posts: 1015
- Joined: Wed Jul 20, 2005 4:47 pm
- Location: Germany
- Contact:
Jump to
- Announcements / Informations
- ↳ வரவேற்பும், வாழ்த்தும்
- Forum help
- Downloads
- ↳ Programms
- ↳ Fonts
- ↳ Lycris [PDF]
- ↳ eBooks [PDF]
- ↳ Media
- ↳ Wallpaper
- ↳ Miscellaneous Files
- ↳ Bible Software
- ↳ eBook [PDF - German]
- ↳ eBook [PDF - English]
- Streaming Section
- ↳ Video Songs
- ↳ Audio Songs [Recorded from Cassette]
- ↳ Audio Songs [Ripped from CD]
- ↳ Video Sermons
- ↳ Audio Sermons
- ↳ Movies & Dramas
- ↳ Video Bible
- ↳ Audio Bible
- ↳ TV Programms
- ↳ MP3 Songs
- ↳ Audio Clips
- ↳ Video Clips
- Bible Study
- ↳ தமிழ் வேதாகம வகுப்புகள்
- ↳ ஜேர்மன் வேதவகுப்புகள்
- ↳ Der Brief des Jakobus
- ↳ வேதாகம சொல்அகராதி
- ↳ வேதாகம பெயர் அகராதி
- ↳ ஸ்தோத்திர பலி
- ↳ வேதத்தின் வாக்குத்தத்தங்கள்
- ↳ வேதாகம வீரர்கள்
- ↳ வேததியானங்கள்
- ↳ பெயர்களும் பொருள்களும்
- Songs Lyrics
- ↳ பாடல் வரிகளும் இசையும்
- ↳ கோதுமை மணிகள் (Vol.1)
- ↳ கிறிஸ்தவ கீர்த்தனைகள்
- ↳ இரட்சண்ய கீதங்கள்
- ↳ ஆத்தும இரட்சிப்பு கீதங்கள்
- ↳ கிறிஸ்தவ நற்செய்தி பாடல்கள்
- Tamil Christian Books
- ↳ கிறிஸ்தவ நூல்கள்
- ↳ நற்செய்தி நூல்கள்
- ↳ சுவிசேஷ துண்டுப் பிரதி
- ↳ சுவிசேஷ கைப்பிரதி
- ↳ படித்தவைகள்
- Kid´s Corner
- ↳ Stories from the Bible
- ↳ Bible Animated Stories
- ↳ நாடகம்
- ↳ சிறுவர் தேவாகம வரைபடங்கள்
- ↳ Kinder Bibel
- ↳ Sunday School Songs
- Bible Questions & Answers
- ↳ விவாத மேடை
- ↳ வேதாகமத்தில் இருந்து சில இரகசியங்கள்
- ↳ இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை செய்திகள்
- ↳ பொதுவான கேள்விகள்
- Missionary
- ↳ மிஷனறிகளுடைய வரலாறுகள்
- Daily Devotions
- ↳ தினதியானம்
- ↳ தினசரி ஜீவியம்
- ↳ இன்றைய சிந்தனை
- Poems
- ↳ கவிதைகள்
- வேதாகமப் போட்டி
- Trash