இருவரும் பேரின்பபுரத்தை அடைந்தார்கள். இங்கு நறுமணம் கொண்ட தென்றல் வீசியது! தihயெங்கும் வண்ண வண்ண மலர்கள்! எங்கும் பறவைகளின் இன்னிசை கீதங்கள்! இங்கு சூரியன் இரவுபகலாகப் பிரகாசித்தது!
அங்கிருந்தபடியே மோட்சத்தைக் கண்டு மெய்மறந்து நின்றார்கள்! முத்துக்களாலும், நவரத்தினங்களாலும் கட்டப்பட்டிருந்த அந்தப் பட்டணம் பிரகாசமாக ஒளி வீசியது. தரையெங்கும் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டு தகதகவென்று மின்னியது! சூரிய ஒளி அதன்மீது பட்டுப் பிரதிபலிப்பதைக் காண முடியாமல் கண்களைப் பொத்திக் கொண்டார்கள் இருவரும்! மோட்சப் பட்டணம் அவ்வளவு பிரகாசமாக இருந்தது!
பயணிகள் இருவரும் அங்கிருந்து தோட்டத்தின் பழங்களைப் பறித்து உண்டார்கள். மர நிழலில் படுத்து ஒய்வெடுத்தார்கள்.
அவர்கள் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தபோது தங்கம்போல ஒளிவீசும் ஆடையணிந்த இருவரைச் சந்தித்தார்கள். அவர்கள் முகம் பிரகாசமாக இருந்தது! பயணிகளைக் கண்டு நலம் விசாரித்தார்கள் அவர்கள்.
இன்னும் இரண்டு சோதனைகளைத்தான் நீங்கள் சகிக்க வேண்டியிருக்கிறது. அதன்பிறகு மோட்சத்தை அடையலாம் என்று அவர்கள் கூறியவுடன் பயணிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!
மேலும் சிறிது தூரம் சென்றவுடன் மோட்சத்தின் வாசலைக் கண்டார்கள். ஆனாலும் அவர்களுக்கும் வாசலுக்குமிடையே ஒரு பெரிய ஆறு ஓடியது! ஆதன் ஆழமோ அதிகம்! அதைக் கடக்கப் பாலமும் இல்லை! பயணிகள் இருவரும் தயங்கி நின்றார்கள்!
ஆதுவரை அவர்களுடன் வந்த ஒளிவீசும் ஆடையனிந்தவர்கள் நீங்கள் அந்த வாசலை அடையவேண்டுமானால் இந்த ஆற்றைக் கடந்துதான் செல்லவேண்டும் என்று கூறிவிட்டார்கள். பயந்து நடுங்கியபடியே ஆற்றினுள் இறங்கினார்கள் இருவரும்! சுpறிது நேரம் போவதற்குள்ளாக நீர்மட்டம் அவர்கள் தலைக்குமேல் வந்துவிட்டது! கிறிஸ்தியான் மூழ்கத்துவங்கினான்!
ஐயோ, அமிழ்ந்து போகிறேனே! என்று புலம்பினான். கவலைப்படதே கிறிஸ்தியான். ஆழம் அதிகமில்லை! என் கால்களுக்குக் கீழாக கடினமான தரை தட்டுப்படுகிறது என்று தேற்றினான் நம்பிக்கை.
ஆனால் கிறிஸ்தியானோ, நான் சாகும் வேளை நெருங்கிவிட்டது. என்னால் பாலும் தேனும் ஓடும் மோட்ச பூமியைப் பார்க்க முடியாது என்ற அங்கலாய்ப்போடு நம்பிக்கையின்மீது சாய்ந்துவிழுந்தான். கிறிஸ்தியான் மூழ்கிவிடக்கூடாதே என்று மிகவும் கடினத்துடன் அவனைத் தாங்கிப் பிடித்தபடியே நீந்தினான் நம்பிக்கை.
அப்போது நம்பிக்கை விசுவாசத்தோடு, இயேசுவானவரே, எங்களைக் காப்பாற்றும் என்று வேண்டினான். இந்த வார்த்தைகள் கிறிஸ்தியானுக்கு உற்சாகத்தைக் கொடுத்தன. அவனும் புத்துணர்வோடு நீந்தத் துவங்கினான். இவ்வாறு முதல் சோதனையில் வெற்றிபெற்றார்கள்!











