
வானத்தையும் பூமியையும் மற்றும் உயிர்வாழ்வனவற்றையும் சிருஷ்டித்த தேவன் தனது சாயலாக மனிதனைச் சிருஷ்டித்தார். அவனில் கொண்ட அன்பினால் தான் படைத்த பூமியையும் மற்றும் உயிர்வாழ்வன யாவற்றையும் அவனிடம் கொடுத்து, அனைத்தையும் ஆளும் அதிகாரத்தையும் கொடுத்தார். இருப்பினும் அவன் தனக்குக் கீழ்ப்படிந்தவனாக, தன்னையே நேசிக்கிறவனாக வாழவேண்டும் என்பதற்காய் கட்டளையொன்றை வைத்தார்.
மனிதனோ அக்கட்டளையை மீறி தேவனிடமிருந்து பிரிவை ஏற்படுத்தி, பாவத்தையும் சாபத்தையும் தேடிக்கொண்டான். சுயகிரியையினாலோ சுயஞானத்தினாலோ தனது பாவத்தையும் சாபத்தையும் போக்கிக்கொள்ள முயன்றும் பலன் கிடைக்கவில்லை. காலம் முழுவதும் வேதனைப்பட்டு மரணத்தைத் தேடிக்கொண்டான். தேவனையோ மறந்துவிட்டான்.
அன்பும் இரக்கமும் உள்ள தேவன் மனிதன் தன்னைவிட்டு தூரமாய்ப் போய் மரித்து அழிந்துவிடுவதை விரும்பவில்லை. இரக்கம்கொண்டு தனது ஒரேபேறான குமாரனான இயேசுவை எமக்குத் தந்து அவர்மூலம் மீட்பின் வழியை அமைத்தார். பாவத்திற்கு நாம் பெறும் கூலியான மரணத்தை பாவமறியாத அவர் சுமந்துகொண்டார். நாம் மரணத்தினின்று நீங்கி, ஜீவனைப் பெறுவதற்காக அவர் ஜீவனை விட்டு உயிர்த்தெழுந்தார். இன்றும் ஜீவனுள்ள தேவனாய் ஜீவிக்கும் இயேசு கிறிஸ்து தன்னை விசுவாசித்து மனந்திரும்பும் பாவி ஒவ்வொருவரையும் மீட்டு பரலோக பேரின்ப வாழ்வுதர வாஞ்சையோடு காத்திருக்கிறார். தேவனுடைய இந்த நற்செய்தியைக் கூறும் வேதவார்த்தைகளை படங்கள் மூலம் தெளிவு படுத்துவதாய் இது சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த வசனங்கள் அனைத்தும் பரிசுத்த வேதாகமத்திலிருந்து எடுக்கப்பட்டது.

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்;. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்;, அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்;. ஆணும் பெண்ணுமாக அவர்;களைச் சிருஷ்டித்தார்;. தேவனாகிய கர்;த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார்;, மனுஷன் ஜீவாத்துமாவானான். தேவனாகிய கர்;த்தர்;, பார்;வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்;. தேவனாகிய கர்;த்தர்; மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.

தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
தேவனாகிய கர்;த்தர்; வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்;க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்;. அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் என்ன பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று.

சாத்தான் ஸ்திரியை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது. ஸ்திரி சாத்தானைப் பார்;த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம். ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார்; என்றாள். அப்பொழுது சாத்தான் ஸ்திரியை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை. நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்;களைப்போல் இருப்பீர்;கள் என்றும் தேவன் அறிவார்; என்றது. அப்பொழுது ஸ்திரியானவள், அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள். அவனும் புசித்தான்.

ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்;த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்;கள். அப்பொழுது தேவனாகிய கர்;த்தர்; ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார்;. பின்பு அவர்; ஆதாமை நோக்கி;: நீ உன் மனைவியின் வார்;த்தைக்குச் செவி கொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்;வையால் ஆகாரம் புசிப்பாய். நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்;.

பின்பு தேவனாகிய கர்;த்தர்;: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான். இப்பொழுதும் அவன் தன் கையைநீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று, அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்;த்தர்; அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்;. அவர்; மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்.

ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான். அவள் கர்;ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள். பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள். காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான். பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான். அவள் ஒரு குமாரனைப் பெற்று: காயீன் கொலைசெய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார்; என்று சொல்லி, அவனுக்குச் சேத் என்று பேரிட்டாள். மனுஷர்; பூமியின்மேல் பெருகத்துவக்கி, அவர்;களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது, தேவகுமாரர்; மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்;களென்று கண்டு, அவர்;களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்;கள்.

கர்;த்தர்;: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை. அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்;. மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்;த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்;த்தர்; மனஸ்தாபப்பட்டார்;. அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.

அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை. உணர்;வுள்ளவன் இல்லை. தேவனைத் தேடுகிறவன் இல்லை. எல்லோரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்;கள். நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை. நாசமும் நிர்;ப்பந்தமும் அவர்;கள் வழிகளிலிருக்கிறது. சமாதான வழியை அவர்;கள் அறியாதிருக்கிறார்;கள். அவர்;கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே.

எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்;களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்;கள். தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக் காலத்திலே தமது நீதியை காண்பிக்கும் பொருட்டாகவும், கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்;.

ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும். அந்தப்படி, கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும்பொருட்டு: எவர்;களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்;களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள். எவனுடைய பாவத்தைக் கர்;த்தர்; எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்.
இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். என்னை அறிந்தீர்;களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்;கள். இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்;கள்.

இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள். கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது. அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்;கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கிறவர்;கள் சிலர்;.
நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
ஜீவஅப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.

பயப்படாதிருங்கள். இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்;த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர்; உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்;.
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. ஏனெனில் அவர்; தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்;களை இரட்சிப்பார்;.
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்;ந்தார்;.

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர்; காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர்; நொறுக்கப்பட்டார்;. நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்;மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம். கர்;த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்;மேல் விழப்பண்ணினார்;.
நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்;.
நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்;த்து நிற்கிறீர்;கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர்; எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்;.

அவர்; சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர்; மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.
அவர்; தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர்; சாயலானார்;. அவர்; மனுஷரூபமாய்க் காணப்பட்டும், மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்;.
அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர்; உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறர்ர்;.
தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான். அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
இயேசுவானவரே (தேவன்) கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான். பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான்.

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்;களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்;கள் எத்தனைபேர்;களோ, அத்தனைபேர்;களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்;.
நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்;. ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய். நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய்த் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.
உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றைக்கும் நிலைத்திருப்பான்.

சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்;களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. அந்தப்படி ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன்.
எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்; களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்;வாதம் பெறும். முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது. சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.

ஒருதரம் பிரகாசிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்;த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்;த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்;த்தும், மறுதலித்துப்போனவர்;கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
இவர்;கள் தண்ணீரில்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடியுண்டோடுகிற மேகங்களுமாயிருக்கிறார்;கள். என்றென்றைக்குமுள்ள காரிருளே இவர்;களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகைள ஏற்றுக்கொள்ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.
கர்;த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்;கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்;களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும். அவர்;கள் நீதியின் மார்;க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப் பார்;க்கிலும் அதை அவர்கள் அறியாதிருந்தார்;களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்;கள்.
உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.

வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்;வதிக்கப்பட்டவர்;களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
இவர்;கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்;கள். சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர்; இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்;. இவர்;கள் பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை. வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை. சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்;. தேவன்தாமே இவர்;களுடைய கண்ணீர்; யாவையும் துடைப்பார்;.















