- நல்ல மேய்ப்பன்
யோவான் 10:1-18
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான். வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான், ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக் கொண்டுபோகிறான். அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது. அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார் இந்த உவமையை இயேசு அவர்களுடனே சொன்னார், அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை. ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள், ஆடுகள் அவர்களுக்குச் செவி கொடுக்கவில்லை. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான், அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும். கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான். நானே நல்ல மேய்ப்பன், பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன், ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு, அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும். நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான், நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.
நாமெல்லாம் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்தோம் என்று ஏசாயா (53:6) தீர்க்கதரிசி கூறுகிறான். நல்ல மேய்ப்பன் உவமையில் மனிதர் ஆடுகளுக்கும் கிறிஸ்து மேய்ப்பனுக்கும் ஒப்பிடப்பட்டுள்ளார்கள். மனிதர் ஆடுகளைப் போன்றிருக்கிறார்கள். மனிதர் பாவத்தில் விழுந்து வழிதப்பித் திரிவதால் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. கிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்து தனது போதனையாலும் முன்மாதிரியாலும் மனிதருக்கு மோட்சானந்தம் அடையும் வழியைக் காண்பித்தார். அவர் நம்மை நடத்துவார்.
- ஒப்பிடுதல்: வசனம் 10:1-6
(அ) இரட்சிப்பு: வசனம் 1 இவ்வசனத்தின் மூலம் கிறிஸ்து பரலோக வாசலைச் சுட்டிக் காண்பிக்கிறார். யோவான் 14:6ஐ கருத்தாய் படிக்கவும்: அப் 4:12யும் படிக்கவும்.
(ஆ) மேய்ப்பன் – வசனம் 2 கிறிஸ்து பிரதான மேய்ப்பன்.
(இ) இரட்சகர் – வசனம் 3. கிறிஸ்துவின் வழிநடத்துதலுக்குட்படுகிறவர்களுக்குத் தேவன் இரட்சிப்பின் வழி கிறிஸ்துவால் திறக்கப்பட்டுள்ளது.
(ஈ) அந்நியர்கள் – வசனம் 4-5 அந்நியர் அவருக்குப் பின் செல்லுவதில்லை. ஏனெனில் அவர்களுக்கு அவரது சத்தம் தெரிவதில்லை.
(உ) ஆவிக்குரிய கருத்து – வசனம் 6 இந்த உவமை ஆவிக்குரிய கருத்து அடங்கியதாகையால் உலக மனிதர் இதன் கருத்தை அறிந்து கொள்வதில்லை.
- கிறிஸ்துவின் வசனம் 10:7-15
(அ) கிறிஸ்து: வசனம் 7. அவர் வாசலாயிருக்கிறார். இரட்சிப்பின் ஒரே வழி அவரே.
மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு. அதன் முடிவோ மரணவழி-நீதி 14:12. கிறிஸ்துவே வழி. நானே வாசல் என்று யோவான் சுவிசேஷத்தில் எட்டு முறை தெளிவாக்கியுள்ளார்.
(ஆ) பிரச்சினை: வசனம் 8. கிறிஸ்துவுக்குமுன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள். அவர்களெல்லாரும் பாவத்தில் செத்திருக்கிறார்கள். ஆனால் கிறிஸ்து பாவத்தில் செத்தவர்களை உயிர்ப்பிக்க வந்தார் எபி 2:1
(இ) மன்னிப்பு: வசனம் 9. இயேசுவிடம் வருகிறவதுகள் காக்கப்படுவார்கள். ஆவரிடம் வருகிறவர்களை அவர் புறம்பே தள்ளுவதில்லை. ரோமர் 10:13. யோவான் 6:37. அவருடைய இரத்தம் சகல பாவங்களையும் கழுவி சுத்திகரிக்கிறது 1.யோவான் 1:7.
(ஈ) ஆள்த்;தத்துவம்: வசனம் 10-11. ஜீவன் வச10. அவர் பரிபூரண ஜீவனுள்ள ஆனந்த வாழ்க்கையை அருள வந்தார் சங் 16:11. அன்பு: அவர் ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுத்தார் யோவான் 15:13.
(உ) நடைமுறை: வசனம் 12-14. கூலியாள் கூலிக்காக வேலை செய்கிறார். அவன் தேவ அழைப்பு பெற்று பணிபுரிவதில்லை.
(ஊ) பாதுகாப்பு: வசனம் 15. அவர் தன் ஜீவனைக் கொடுத்து ஆடுகளைப் பாதுகாக்கிறார் சங் 91.
- கரிசனை : வசனம் 10:16-18
(அ) ஆத்தும ஆதாயம் செய்தல்: வசனம் 16. உலகத்திற்குக் கிறிஸ்து தேவைப்படுகிறார். கிறிஸ்தவர்கள் தங்கள் இரட்சிப்பில் திருப்தியடைந்து விடக்கூடாது. பிறரும் இரட்சிப்படைய கரிசனை கொள்ள வேண்டும். மாற்கு 16:15.
(ஆ) ஒப்புவித்தல்: வசனம் 17. கிறிஸ்து தன் ஜீவனை மனப்பூர்வமாய் ஒப்புவித்தார். ஆவர் எல்லா இடத்திலுள்ள எல்லாருக்காகவும் ஜீவனைக் கொடுத்தார் யோவான் 3:16.
(இ) தியாகம்: வசனம் 18. ஒருவனும் என் ஜீவனை என்னிடத்திலிருந்து எடுத்துக் கொள்ளமாட்டான். நானே அதைக் கொடுக்கிறேன். அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரமுண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.
ஆடுகள் மேய்ப்பனுக்குச் செவிசாய்க்காதபடி தங்கள் இஷ்டப்படி சென்றால் அவை ஜீவனை இழக்க நேரிடும். நாம் கிறிஸ்துவின் இருக்கும் வரையிலும் அவர் நம்மோடிருக்கும் வரையிலும் தீமை நம்மை அணுகாது. ஆவரைவிட்டு நாம் விலகிச் செல்லும்போது நாம் பாதுகாப்பை இழக்கிறோம். இதை உணர்ந்து அவரை நெருங்கிப் பின்பற்றிச் செல்வோம்.










