வேதாகமத்தை ஆராயுங்கள்
தேவனுடைய வார்த்தையை விடாமுயற்சியுடன் படிப்பது ஒவ்வொரு விசுவாசிக்குமுரிய அவருடைய சித்தமாகும் (யோசு.1:8, உபா.6:6-9). கர்த்தராகிய இயேசு பரிசேயர்களிடம் வேதாகமமே நித்திய வாழ்வுக்கு திறவுகோல் என்று கூறினார். ஆயினும், வேதாகம அறிவில் பெருமை கொண்டிருந்த பரிசேயர்கள், தங்கள் மேசியாவை அடையாளம் கண்டுகொள்ளவும், தேவனிடத்திற்குச் செல்லும் வழியை அறியவும் தவறினார்கள். அவர்களுடைய படிப்பில் ஒரு தீவிரமான குறைபாடு இருந்தது. பல பெயரளவிலான விசுவாசிகள் வேதாகமத்தை அவ்வப்போது, நெருக்கடியான நேரங்களில், அல்லது வெறும் வழக்கமாக மட்டுமே வாசிக்கிறார்கள். அவர்களுடைய வாழ்வில் வார்த்தை பிரதிபலிக்கப்படுவதில்லை. அவர்கள் மறைந்திருக்கும் புதையல் போல தெய்வீக சத்தியத்திற்காக தோண்டி எடுப்பதில்லை (நீதி.2:1-5). அவர்கள் தேவனுடைய வார்த்தையில் மகிழ்வதில்லை, இரவும் பகலும் அதை தியானிப்பதும் இல்லை (சங்.1:2). அவர்கள் “தினமும் வேதாகமத்தை ஆராய்வதில்லை” (அப்.17:11). இதன் விளைவாக அவர்கள் ஆவிக்குரிய ரீதியில் ஏழைகளாக இருக்கிறார்கள்.
துரதிர்ஷ்டவசமாக, இன்றைய சராசரி விசுவாசி தனது வேதாகம அறிவிற்காக ஞாயிறு பிரசங்கங்களை மட்டுமே சார்ந்துள்ளார். வேதாகமத்தை தீவிரமாக படிப்பதற்கான அர்ப்பணிப்பு குறைவாக உள்ளது. சில விசுவாசிகள் கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள், ஆனால் வேதாகமத்தை திறம்பட படிப்பது எப்படி என்று அவர்களுக்குத் தெரியாது. இந்த பாடம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், “என்றென்றும் நிலைத்திருக்கும் தேவனுடைய வார்த்தையை” (1.பேது.1:23) தீவிரமாக படிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட வர்களுக்கானது. தயாரிப்பு, கவனித்தல், வியாக்கியானம் மற்றும் பிரயோகித்தல் ஆகிய தேவையான பகுதிகளை நாம் கருத்தில் கொள்வோம்.
ஆயத்தம்
- உடல்ரீதியான ஆயத்தம்.ஓய்வாகவும் புத்துணர்ச்சியுடனும் இருங்கள். இந்த கண்ணோட்டத்தில் காலை நேர படிப்பு சிறந்தது. உங்களுக்குத் தேவையான ஓய்வைப் பெற சீக்கிரம் படுக்கைக்குச் செல்லுங்கள். ஒரு நோட்டுப் புத்தகம், அகராதி மற்றும் வேத வசன ஒப்பீட்டு அகராதி உட்பட அனைத்து படிப்பு உதவிகளையும் கையில் தயாராக வைத்திருங்கள். நீங்கள் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு வேதாகமப் பதிப்பைப் பயன்படுத்துங்கள்.
- ஆவிக்குரிய ஆயத்தம். வேதாகமம் மனரீதியாக புரிந்துகொள்ளுதலiவிட ஆவிக்குரிய வழிகளில் புரிந்துகொள்வதை உள்ளடக்கியது. இயற்கையான மனதால் தேவ ஆவியின் போதனைகளைப் புரிந்துகொள்ள முடியாது (1.கொர.2:14). தேவனுடைய வார்த்தை பல கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது (2.கொரி.3:13-15). மிகவும் பக்தியுள்ள விசுவாசி கூட, “உமது வேதத்திலுள்ள அதிசயங்களைப நான் பார்க்கும்படி என் கண்களைத் திறந்தருளும்” (சங்.119:18) என்று ஜெபிக்க வேண்டும். கீழ்ப்படிதலுள்ள இருதயத்திற்கு புரிதல் கொடுக்கப்படுகிறது (யோ.7:17). வார்த்தையிடம் வருவதற்கு முன்பு நம் இருதயங்களையும் மனங்களையும் நாம் ஆயத்தப்படுத்த வேண்டும். அப்போது வேதாகமம் உயிருள்ள வல்லமையுடன் நம்மிடம் வரும். இந்த விஷயங்களை நீங்கள் நினைவூட்டுங்கள்:
- a. தேவன் உங்களுக்குக் கற்பிக்கக் ஜெபித்துக் கேளுங்கள் (சங்.119:33,73).
b. தெரிந்த எல்லாப் பாவங்களையும் அறிக்கை செய்யுங்கள் (சங்.119:133).
c. தேவனுக்கு முன்பாக தெளிந்த மனசாட்சியைக் கொண்டிருங்கள் (அப்.24:16).
d. முடிந்தவரை மற்றவர்களுடன் சமாதானமாயிருங்கள் (மத்.5:24).
e. வார்த்தையிடம் வரும்போது தாழ்மையுடன் இருங்கள் (மத்.11:25).
f. தேவனுடைய சித்தத்தைச் செய்ய விரும்புங்கள் (யோ.7:17, யாக்.1:21-25).
g. இது தேவனுடைய வார்த்தை என்று விசுவாசித்து வாருங்கள் (தெச.2:13, 2.தீமோ.3:16).
கவனித்தல் (அது என்ன சொல்கிறது?)
நாம் வாசிப்பதை உன்னிப்பாக ஆராய கற்றுக்கொள்ள வேண்டும். கவனமாக இல்லாமல் வாசித்தால், ஒரு வசனம் என்ன அர்த்தம் சொல்கிறது அல்லது அது தனிப்பட்ட வாழ்க்கைக்கு எப்படிப் பொருந்துகிறது என்பது பற்றி எந்த முடிவையும் எடுக்க நாம் தயாராக இருக்க மாட்டோம். விஷயத்தை மேலோட்டமாகப் படிப்பதைத் தவிர்க்கவும். நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதை ஒழுங்குபடுத்துங்கள். வார்த்தையைப் படிப்பதில் கடினமாக உழைக்கவும். இதற்கு அதிக பயிற்சி தேவையானது.
- பொதுவான செயல்முறை.
a. நீங்கள் படிக்கும்போது கவனம் செலுத்துங்கள்! மனம் அலைபாய்வதைத் தடுக்கவும்.
b. எண்ணங்கள் மற்றும் கேள்விகள் குறித்த குறிப்புகளை உருவாக்கவும். முக்கியமான வார்த்தைகளை அடிக்கோடிடவும்.
c. ஒரு நேரத்தில் ஒரு வார்த்தையாக இல்லாமல், வாக்கியங்களையும் சொற்றொடர்களையும் படிக்கவும். - கவனிக்க வேண்டிய விவரங்கள்.
a. திறவுகோல் வார்த்தைகள் பெரும்பாலும் திரும்பத் திரும்ப வருவதிலிருந்து தெளிவாகத் தெரியும்.
b. வாக்குறுதிகள், எச்சரிக்கைகள், உதாரணங்கள் அடையாளம் காணப்பட வேண்டும்.
c. ஒப்பீடுகள் அல்லது விளக்கப்படங்கள் பழக்கமானவற்றின் அடிப்படையில் விஷயங்களை விளக்குகின்றன.
d. ஒரு பட்டியல் அல்லது தொடர்ச்சியான விஷயங்கள் இருக்கின்றனவா? ஒரு விஷயம் அடுத்த விஷயத்திற்கு வழிவகுப்பதற்கான ஆதாரம் உள்ளதா?
e. என்ன கேள்விகள் கேட்கப்பட்டன?
f. என்ன அழுத்தமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன (“மெய்யாகவே,” “இதோ”)?
g. ஒரு சம்பவம் அல்லது கதையைப் பார்க்கும்போது, கதாபாத்திரங்களில் ஒருவராக உங்களை வைத்து தனிப்பட்ட முறையில் அதை மீண்டும் வாழ முயற்சிக்கவும். கதாபாத்திரங்கள் யார்? இது எங்கே நடக்கிறது? கதை எப்படித் தொடங்கி முடிகிறது? ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பதில் என்ன? என்ன மனப்பான்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன அல்லது சாட்சியமளிக்கின்றன ? கதாபாத்திரங்கள் ஏற்றுக்கொள்ளும் தன்மையுடையவர்களா அல்லது விரோதமானவர்களா?
h. வினைச்சொற்களைக் கவனியுங்கள். அவை ஒரு முடிவடைந்த செயலை, தற்போதைய நிகழ்வை, அல்லது எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஒன்றைக் குறிப்பிடுகின்றனவா?
i. இணைப்புச் சொற்களில் கவனம் செலுத்துங்கள். இணைப்புச் சொற்கள் முக்கியமானவை.
மற்றும் ஒரு கருத்தின் தொடர்ச்சியைக் குறிக்கிறது.
ஆனால் இரண்டு கருத்துக்களுக்கு இடையிலான வேறுபாட்டைக் காட்டுகிறது.
ஏனெனில் ஒரு கூற்றுக்கான காரணத்தையோ விளக்கத்தையோ கொடுக்கிறது.
ஏனென்றால் காரணத்தைக் குறிக்கிறது.
பின்னர், ஆகையால், எனவே நம்மை ஒரு முடிவுக்குக் கொண்டுவருகின்றன.
அது நோக்கத்தைக் காட்டுகிறது.
என்றால் ஒரு முக்கியமான நிபந்தனைச் சொல். கூறப்பட்ட அல்லது மறைமுகமான நிபந்தனைகளைக் கவனியுங்கள்.
வியாக்கியானம் (அதன் பொருள் என்ன?)
ஒரு ஆசிரியரைப் புரிந்துகொள்ள, தேவ ஆவியின் வழிநடத்துதலின் கீழ் அவர் வெளிப்படுத்திய பொருளை நாம் புரிந்துகொள்ள முயலவேண்டும். இது நம் சொந்த வாழ்க்கைக்குப் பிரயோகிப்பதிலிருந்து வேறுபட்டது, இது பின்னர் நிகழும் ஒரு தனிப் படியாகும்.
கவனிப்பிலிருந்து நீங்கள் சேகரித்த விடயங்கள் வியாக்கியானத்திற்கான அடிப்படையாகிறது. விஷயங்களை முழுமையாக சிந்திக்க உங்களை நீங்களே பல கேள்விகளைக் கேட்பது முக்கியம். இது ஏன் வேதாகமத்தில் உள்ளது? சில செயல்கள் அல்லது வார்த்தைகளுக்கு ஏதேனும் அடையாள அர்த்தம் உள்ளதா? கூற்று நேரடிவார்த்தையான அர்த்தத்தில் எடுக்கப்பட வேண்டுமா அல்லது அது ஒரு பேச்சு வழக்கமா? சூழல் என்ன? (இந்த பகுதிக்கு முன் என்ன நடந்தது, பின் என்ன வந்தது?) இந்த கேள்விகளுக்கான பதில்கள் வியாக்கியான செயல்முறைக்கு இன்றியமையாதவை.
மூன்று எளிய கோட்பாடுகள் பொதுவான செயல்முறையை நிர்வகிக்கின்றன.
1. வார்த்தையைத் தவிர வேறொன்றும் இறுதியாக அதிகாரமுடையதல்ல.
2. முழு வார்த்தையும் சமநிலையையும் சரியான தன்மையையும் அளிக்கிறது.
3. வார்த்தையின் மூலம் வியாக்கியானம் செய்வதே மிகவும் நம்பகமான முறையாகும்.
ஆழமாகச் சிந்தியுங்கள். இதைப் பற்றி நீங்கள் ஜெபித்து தியானித்தீர்களா? உங்கள் சிந்தனையை பாதித்திருக்கக்கூடிய ஏதேனும் ஒரு வழியில் உங்களுக்கு ஒரு வேறுநோக்கம் இருக்கிறதா? உங்கள் யோசனைகளை மற்றவர்களுடன் ஒப்பிடுவதற்கு ஆதாரமாக உதவிகள் அல்லது பிற காரியங்களை ஆலோசித்தீர்களா? ஒரே விஷயத்தைப் பற்றிய இணைக்குறிப்புகளை நீங்கள் போதுமான அளவு படித்தீர்களா? சில வேதாகமக் கோட்பாடுகள் மற்றவற்றுடன் முரண்படுவதாகத் தோன்றலாம் என்பதை நினைவில் கொண்டு, ஒரே வார்த்தை அல்லது கோட்பாட்டின் வெவ்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டீர்களா? இவற்றைப் படிப்பின் மூலம் தீர்க்கவும்.
பிரயோகித்தல் (என் வாழ்க்கையில் நான் அதை எப்படிப் பயன்படுத்த முடியும்?)
பிரயோகித்தல் என்பது உண்மையான வேதாகமப் படிப்பின் பலன ஆகும்;. நீங்கள் படித்ததைப் பற்றி என்ன செய்வீர்கள்? தேவனைப் பற்றிய பெரிய உண்மைகள் கூட நம் வாழ்க்கையை மாற்றும் விளைவைக் கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில், அது அறிவைச் சேகரித்து தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு அறிவுசார் விளையாட்டாக மாறும். கர்த்தராகிய இயேசுவின் முறை கற்பிப்பது மட்டுமல்ல, கற்பித்துச் செய்வது (அப்.1:1). நீங்கள் எதையும் செய்யாத பல எண்ணங்களை விட, நீங்கள் பிரயோகிக்க முயலும் ஒரேயொரு எண்ணத்தை அடையாளம் காண முயற்சிக்கவும். பிரயோகங்களைப் பெற கேள்வி முறையைப் பயன்படுத்தவும்.
உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: இந்த சத்தியத்தின் முக்கியத்துவம் என் அனுதின வாழ்க்கைக்கு எவ்வாறாக உள்ளது? இது என் வாழ்க்கையில் செயல்படும் ஒரு காரியமா? இதைப் பற்றி நான் குறிப்பாக என்ன செய்ய திட்டமிட்டுள்ளேன்? இதற்கு முன்பு நான் ஏன் செயல்படவில்லை? நான் நடவடிக்கை எடுப்பதை யார் சரிபார்த்து, அது நடக்கும் வரை என்னுடன் ஜெபிப்பார்கள்? நான் உண்மையுள்ளவனாக இருக்கிறேனா?
பின்வரும் கூடுதல் கேள்விகள் தனிப்பட்ட பிரயோகத்தின் பகுதிகளை வரையறுக்க உதவுகின்றன.
- உரிமை கோர ஒரு வாக்குத்தத்தம் இருக்கிறதா? தேவனுடைய வாக்குத்தத்தங்களின் நம்பகத்தன்மையின் உறுதிப்பாடு அவருடைய நேர்மையைச் சார்ந்துள்ளது. “பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல” (எண்.23:19). விசுவாசிகள் நீண்ட காலமாக தேவனுடைய வாக்குத்தத்தங்களை விசுவாசத்தால் உரிமை கோரும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர் (2.பேது.1:4). நிபந்தனைகளை நீங்கள் கவனித்தீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பதிலளிக்கப்பட்ட ஜெபம், உதாரணமாக, மிகவும் நிபந்தனையோடு சம்பந்தப்பட்டது (யாக்.1:5-7, 1.யோ.3:22, 5:4, சங்.66:18). சில விஷயங்கள் தேவனுக்கு மிகவும் கடினமானவை என்று நாம் நினைப்பதால் அடிக்கடி நாம் தடைபடுகிறோம் (எரேமி. 32:27). பரலோக வங்கியிலிருந்து தேவனுடைய காசோலைகளை அங்கீகரியுங்கள். அவற்றை உங்களுடையதாக்குங்கள்!
- பின்பற்ற ஒரு உதாரணம் இருக்கிறதா? வேதாகமத்தின் மாமனிதர்களின் வாழ்க்கை பல நேர்மறையான உதாரணங்களை வழங்குகிறது. தேவபக்தியுள்ள ஆண்களும் பெண்களும் நமக்குப் மாதிரிகளாக இருக்க வேண்டும் (எபி.13:7). அவர்களைப் பின்பற்றுங்கள்!
- கீழ்ப்படிய ஒரு கட்டளை இருக்கிறதா? “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பளைகளைக் கைக்கொள்ளுங்கள்,” என்று இரட்சகர் கூறினார் (யோ.14:15). கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிதல் நாம் உண்மையான விசுவாசிகள் என்பதற்கான சான்று (1.யோ.2:3-4). கீழ்ப்படிதல் “பிரமாணம்;” த்துடன் குழப்பப்படக்கூடாது, இது இரட்சிப்பு அல்லது கிறிஸ்தவ வாழ்க்கைக்கான தேவனுடைய கோரிக்கைகளாக இருக்கின்றது. நாம் இப்போது கீழ்ப்படியாமையில் இருக்கக்கூடிய பகுதிகளில் வார்த்தை தொடர்ந்து நம்மிடம் பேச வேண்டும். இராஜாவின் கட்டளையிட்டபடி செய்யுங்கள்!
- கைவிட வேண்டிய ஒரு பாவம் அல்லது கவனிக்க வேண்டிய ஒரு எச்சரிக்கை இருக்கிறதா? நம்மைத் தடுக்கும் ஒன்றிலிருந்து நாம் விலக வேண்டியிருக்கலாம், ஒன்றைச் செய்வதை நிறுத்த வேண்டியிருக்கலாம். அது கசப்பு அல்லது பொறாமை அல்லது ஒருவர்மேல் தீர்க்கப்படாத மனக்கசப்பு போன்ற ஒரு மனப்பான்மையாக இருக்கலாம். இது பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தும் (எபேசி.4:30). நாம் நம்புவதற்குப் பதிலாக கவலைப்படலாம். வாழ்க்கையில் நமது முன்னுரிமைகள் தவறாக இருக்கலாம். நமது தியான வாழ்க்கையைப் புறக்கணிக்கலாம். பரலோகத்தில் பொக்கிஷத்தைச் சேர்ப்பதற்குப் பதிலாக பூமியில் பாதுகாப்பைத் தேடலாம். தேவனால் எச்சரிக்கப்படும்போது மாறுங்கள்!
- ஊக்கம் அளிக்கப்படுகிறதா? ஏறக்குறைய ஒவ்வொரு விசுவாசியும் சோர்வை அனுபவித்திருக்கிறார்கள். இது பிசாசின் முக்கிய தாக்குதல் கருவிகளில் ஒன்றாகும். மனோபாவத்தால் உள்நோக்கி (அதிகமாக உள்ளே பார்ப்பவர்கள்) பார்ப்பவர்கள் இதற்கு மிகவும் ஆளாகிறார்கள். தேவன் திராணிக்கு மேலாக சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடுக்கமாட்டார் (1.கொரி.10:13). ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர் நமக்கு போதுமான உதவியைத் தருகிறார். விசுவாசி தேவனிடமிருந்து பெறும் அதே புத்துணர்ச்சியினால் மற்றவர்களை தேற்றமுடியும் (2.கொரி.1:3-5). சோர்வு மற்றும் சந்தேகத்திலிருந்து எழுந்திருங்கள்!
- எடுத்துக்கொள்ள வேண்டிய ஆலோசனை இருக்கிறதா? முதலில் கர்த்தரைக் கலந்தாலோசிக்காமல் திட்டமிடக்கூடாது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் (யாக்.4:13-16). வேதாகமத்திலிருந்து மிகத் தெளிவான ஒரு கூற்று ஒரு முக்கியமான நேரத்தில் நமக்கு உதவக்கூடும். தேவனுடைய சித்தத்தின் பெரும்பகுதியை வேதாகமத்தின் பக்கங்களுக்குள் காணலாம்;, நேரடியாக இல்லையென்றாலும் கருத்தின்படி காணலாம். உணர்வுகளுக்கு முக்கியத்துவம்கொடுக்கும் விசுவாசிகள் வேதாகமத்தின் மூலம் தேவனுடைய வழிநடத்துதலை இழக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் தங்கள் அகநிலை உணர்வுகளை தேவனுடைய வார்த்தையுடன் குழப்புகிறார்கள். தேவன் வார்த்தையின் மூலம் உங்களுக்குக் காட்டுவார் என்பதை கேட்டு எதிர்பார்க்கவும்.
- கவனிக்கப்பட வேண்டிய ஒரு குணாதிசயம் இருக்கிறதா? தேவனைப் பற்றி என்ன கற்றுக்கொள்ள வேண்டும்? கர்த்தராகிய இயேசுவின் ஒவ்வொரு குணாதிசயத்தையும் கவனியுங்கள், நாம் அவருடைய சாயலுக்கு ஒப்பாக மாற்றப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள் (ரோ.8:29). ஆபிரகாம், தானியேல், பவுல் போன்ற தேவனுடைய பெரிய மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் தேவன் என்ன மாற்றமடையவேண்டும் என்று விரும்புகிறார்?
முடிவுரை
பரிசுத்த வேதாகமத்தின் இந்த வற்றாத புதையலை நாம் இன்னும் விடாமுயற்சியுடன் ஆராய்வோம். எபேசிய மூப்பர்களிடம் அவர் விடைபெறும்போது, பவுல் கூறினார்: “நீங்கள் பக்திவிருத்தியடையவும் பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.” (அப்.20:32). தேவனுடைய வார்த்தையின் கட்டளைகள் நம் வாழ்வில் செயல்படும்போது நாமும் கட்டியெழுப்பப்படுவோம்.
பாடம் 1 ற்கான கேள்விகள்
இந்த பயிற்சியின் நோக்கம் குறிப்புகளில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள வேதாகமப் படிப்பு கொள்கைகளைப் பயிற்சி செய்வதாகும். குறிப்புகளை கவனமாகப் படித்து, யாக்கோபு 1:21-27 ஐ பகுப்பாய்வு செய்து, பின்வரும் படிகளை எடுக்கும்போது அவற்றை மீளாய்வுசெய்து பார்க்கவும்.
- ஆயத்தம். குறிப்புகளில் ஆவிக்குரிய தேவைகள் என்பதன் கீழ் உள்ள சரிபார்ப்பு பட்டியலை மதிப்பாய்வு செய்யவும்.
- கவனித்தல் (பகுதி என்ன சொல்கிறது?) யாக்கோபு 1:21-27 ஐ அதன் உள்ளடக்கங்களுடன் நீங்கள் நன்கு பரிச்சயப்படும் வரை பல முறை படிக்கவும். பின்னர் குறிப்புகளில் உள்ள வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி, பத்தியில் உள்ள விவரங்களைத் தேடி, உங்கள் கண்டுபிடிப்புகளை கீழே கவனிப்புகள் என்பதன் கீழ் பதிவு செய்யவும். (பல மாதிரி கவனிப்புகள் வசனம் 21 ற்க்கு காட்டப்பட்டுள்ளன.) முக்கிய வார்த்தைகள், முரண்பாடுகள், ஒப்பீடுகள், விளக்கப்படங்கள், முக்கிய இணைப்புச் சொற்கள், வினைச்சொற்கள், மீண்டும் மீண்டும் வருதல் அல்லது யோசனைகளின் முன்னேற்றம் போன்ற விவரங்களைக் கவனியுங்கள். இந்த படிக்கு போதுமான நேரத்தை எடுத்துக் கொண்டு, உங்களால் முடிந்தவரை பல கவனிப்புகளை பட்டியலிடுங்கள். தேவைப்பட்டால் கூடுதல் தாள்களைப் பயன்படுத்தவும்.
| வச. | கவனிப்புக்கள் | வச. | கேள்விகள் |
| 21 | திறவுகோல் வசனம்: ஏற்றுக்கொள்ளுங்கள், வார்த்தை | 21 | யாக்கோபு “ஆகையால்” என்று ஏன் கூறுகிறார்? |
| இணை வார்த்தை: ஆகையால் | இங்கு “வசனம்” என்பது என்ன? | ||
| இங்கு “அழுக்கு” என்பதன் பொருள் என்ன? | |||
- பொருள்விளக்கம் (இந்தப் பகுதியின் பொருள் என்ன?
- a. உங்கள் தியானத்தைத் தூண்டுவதற்காக, இந்தப் பகுதி குறித்து பல கேள்விகளைக் கேளுங்கள். இது போன்ற கேள்விகளைப் பயன்படுத்துங்கள்: …இன் அர்த்தம் என்ன? …க்கும் …க்கும் உள்ள தொடர்பு என்ன? …இன் முக்கியத்துவம் என்ன? யாக்கோபு ஏன் … கூறுகிறார்? உங்கள் கேள்விகளை ‘கேள்விகள்’ என்று பெயரிடப்பட்ட பத்தியில் பதிவு செய்யுங்கள். (சில மாதிரி கேள்விகள் வச. 21-க்கு பட்டியலிடப்பட்டுள்ளன.)
- b. பகுதியின் சரியான அர்த்தத்தைத் தேடுங்கள். முக்கிய வார்த்தைகளை வரையறுக்க அகராதியைப் பயன்படுத்தவும். சூழல் மற்றும் இணைக்குறிப்புகளிலிருந்து உங்களின் மிக முக்கியமான சில கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சிக்கவும். தேவைப்பட்டால் கூடுதல் தாள்களைப்; பயன்படுத்தவும்.
- c. பின்வரும் ஒவ்வொரு வசனப்பகுதிகளின் பொருளைப் பற்றிய உங்கள் புரிதலை ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் சுருக்கமாகக் கூறுங்கள்.
வச. 21
வச. 22
வச. 23-24
வச. 25
வச. 26-27
- பிரயோகம் (இந்தப் பகுதியை எனது வாழ்வில் எப்படிப் பயன்படுத்துவேன்?
- a. உங்கள் வாழ்க்கைக்கு இந்தப் பகுதியின் முக்கியத்துவம் என்ன?
- b. இதன் போதனை தற்போது உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு செயல்படுகிறது அல்லது செயல்படவில்லை?
- c. இதன் போதனையை உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்துவீர்கள்? குறிப்பாகக் கூறுங்கள்.









