வார்த்தையைப் புரிந்துகொள்ளுதல்
சங்கீதக்காரன் தேவனிடம், “எனக்கு உணர்வைத் தாரும்” (சங்.119:34,125,169) என்று மன்றாடினான். வார்த்தைகளைப் புரிந்துகொள்ளாமல் வெறுமனே வாசிப்பது ஆபத்தை விளைவிக்கும். கர்த்தராகிய இயேசு, “நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது” (யோ.6:63) என்றார். பரிசுத்த வேதாகமம் உலகில் எழுதப்பட்ட மிக ஆழமான எழுத்துக்கள். அவை நமது முழு கவனத்தையும் முயற்சியையும் கோருகின்றன. அவற்றின் ஆவிக்குரிய உட்கிரகிப்பில் உள்ள வாழ்க்கைமாற்றம் நமது எண்ணங்களுக்கு அப்பாற்பட்டது. எனவே, நம் படிப்பில் நாம் கவனக்குறைவாக இருக்கக்கூடாது.
பரிசுத்த ஆவியானவர் வார்த்தையின் மாபெரும் போதகர் (1.யோ.2:27). அதனால்தான் சங்கீதக்காரன் தேவன் தன் கண்களைத் திறக்க வேண்டும் என்று மன்றாடினான் (சங்.119:18). புரிந்துகொள்ளுதல் ஆவியானவரால் ஏற்படுவதால், பல நல்ல எண்ணம் கொண்ட விசுவாசிகள் பகுத்தறிவு அல்லது பாகுபாடு காட்டும் செயல்முறை ஆவிக்குரியதல்ல என்று முடிவு செய்கிறார்கள். மதவெறி, அதீத உணர்ச்சிவசப்படுதல் அல்லது சூழ்ச்சி செய்யும் தலைவர்கள், விசுவாசிகள் மனதை முற்றிலுமாகத் வேறுபிரித்து, ஆவியானவரின் வழிநடத்துதலின் அகநிலை எண்ணங்களைச் சார்ந்திருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். இது நிச்சயமாக எடுக்கக்கூடிய மிகவும் ஆபத்தான பாதைகளில் ஒன்றாகும். தேவன் நமக்கு மனதைக் கொடுத்திருப்பது பயன்படுத்தவே, புறக்கணிக்க அல்ல. நாம் எமது மனதால் கர்த்தரை நேசிக்க வேண்டும் (மாற்.12:30, லூக்.10:27). நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, (1.பேது.1:13). தேவன் தம்முடைய சட்டங்களை நம் மனதில் வைக்க விரும்புகிறார் (எபி.8:10). “உன் வாயைத் விரிவாய் திற, நான் அதை நிரப்புவேன்” என்ற சங்கீதம் 81:10 ஐ, தேவன் படிப்பு அல்லது முயற்சி இல்லாமல் நமக்கு அறிவுறுத்துவார் என்று யாரும் மேற்கோள் காட்டக்கூடாது. கட்டுப்பாடற்ற மனம் படிக்கப் பயிற்சி பெற வேண்டும். நாம் நம் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும், வார்த்தைகளின் அர்த்தங்களைத் தேட வேண்டும், விவரங்களில் கவனம் செலுத்த வேண்டும், மற்றும் தொடர்புகளைப் பார்க்க வேண்டும். வார்த்தையைப் புரிந்துகொள்ள வாஞ்சித்தால், சாதாரண பைபிள் வாசிப்பை மாற்றி ஆழமாகப் படிக்கவேண்டும்.
கவனித்தல்
வேதத்தைப் பற்றிய ஆய்வு தொலைநோக்கியாகவும் நுண்ணோக்கியாகவும் இருக்க வேண்டும், தூரநோக்க பார்வையையும் உள்நோக்க பார்வையையும் உள்ளடக்கியது. பகுப்பாய்வு இவ்வாறு இருக்க வேண்டும்:
1.புத்தகங்கள் வாரியாக. பகுதிகளை பகுப்பாய்வு செய்வதற்கு முன் முழு புத்தகத்தையும் மதிப்பாய்வு செய்யவும். பகுதிகளை முழுமையுடன் தொடர்புபடுத்துவது, மற்றவற்றுடன், சூழலுடன் தொடர்பில்லாத யோசனைகளைச் செருகுவதைத் தடுக்கும். புத்தகத்தை புரிந்துகொள்ள பரந்துநோக்கிய கணகளுடன் கவனிக்கவும்.
- a. முழுக் காரியத்தையும் அறிய, புத்தகத்தை ஒன்றுக்கு மேற்பட்ட முறை முழுமையாக வாசிக்கவும்.
b. நீங்கள் வாசிக்கும்போது முக்கிய யோசனைகளை எழுதுங்கள்.
c. சத்தியம் அல்லது என்ன கருப்பொருள் என்பதைச் சிந்திக்கவும். - d. முக்கிய யோசனையை வெளிப்படுத்தும் ஒரு திறவுகோல் வசனத்தை அடையாளம் காணவும்.
e. சிறிய அல்லது துணை யோசனைகளைத் தேடுங்கள். - அதிகாரங்கள் வாரியாக. ஆதிகாரத்தில் ஒரு சிந்தனை அலகை முடிக்கவில்லை என்றால், ஒரு பெரிய பகுதியை உருவாக்கும் வசனங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஆதிக்கைப்பிரதிகளில் அதிகாரங்களோ பத்திகளோ இல்லை.
- a. பகுதியை முந்தைய மற்றும் பின்வரும் பகுதிகளுடன் தொடர்புபடுத்துங்கள்.
b. முக்கிய யோசனைகளைத் தீர்மானிக்கவும்.
c. பகுதியை சிந்தனை அலகுகளாக அல்லது பத்திகளாகப் பிரிக்கவும்.
d. இந்த அலகுகளை பிரிவில் உள்ள முக்கிய யோசனையுடன் தொடர்புபடுத்துங்கள்.
e. அதிகாரம் அல்லது பிரிவுக்கு மேலே ஒரு குறுகிய தலைப்பை வைக்கவும். - வாக்கியங்கள் வாரியாக. வசனங்கள் பெரும்பாலும் ஒரு பகுதியை மட்டுமே குறிக்கின்றன. வாக்கியம் முழுவதையும் கருத்தில் கொண்டு, பின்னர் இலக்கண விதிகளின்படி பகுதிகளாகப் பிரிக்கவும்.
- a. ஒவ்வொரு வாக்கியமும் அதிகாரத்தில் உள்ள சிந்தனை அலகுடன் எவ்வாறு தொடர்புடையது?
b. எழுதப்பட்டிருப்பதை உண்மையாகப் புரிந்துகொள்வதற்காக பேச்சின் பகுதிகளைக் கவனியுங்கள்.
(1) முக்கிய எழுவாய் என்ன? (எதைப் பற்றி ஏதாவது சொல்லப்படுகிறதோ அது)
(2) முக்கிய செயப்படுபொருள் என்ன? (வினைச் சொல்லின் செயல் எதன் மீது செலுத்தப்படுகிறதோ அது)
(3) முக்கிய வினைச்சொல் என்ன? (செயல் அல்லது இருப்பு முறையை வெளிப்படுத்துவது)
உதாரணம்: “கர்த்தர் (எழுவாய்) உற்சாகமாய்க் கொடுப்பவனை (செயப்படுபொருள்) நேசிக்கிறார் (வினைச்சொல்).” வினைச்சொல் முடிந்த செயலை, இப்போது தொடர்வதை, அல்லது எதிர்காலத்திற்கான ஒன்றைக் குறிக்கிறதா?
உதாரணம்: நாம் 2 கொரிந்தியர் 1:10ஐ இந்த செயல்களை வெளிப்படுத்த எழுதலாம்: “அவர் நம்மை விடுவித்தார் (கடந்த கால செயல்), விடுவிக்கிறார் (தற்போதைய செயல்), மற்றும் விடுவிப்பார் (எதிர்கால செயல்),” நம் சார்பாக கர்த்தருடைய மாபெரும் கிரியையை விவரிக்கிறது.
- தலைப்புகள் வாரியாக. முக்கிய வேதாகமக் கோட்பாட்டுத் தலைப்புகளுடன் பழக்கப்படுங்கள், ஒரு வசனத்தில் அவற்றில் ஒன்று தொடப்படும்போது அடையாளம் காணுங்கள். ஒரு வசனத்திலிருந்து ஒரு உபதேசத்தை அரிதாகவே புரிந்துகொள்ள முடியும். உண்மையில், ஒரு விஷயத்தைப் பற்றி பைபிள் சொல்வதிலிருந்து ஒரு கூற்றைத் தனிமைப்படுத்துவது கிட்டத்தட்ட நிச்சயமாக பிழைக்கு வழிவகுக்கும். வேதாகம தலைப்பு ரீதியான ஆய்வு வேத அறிவிற்கும் வாழ்க்கைக்கும் சரியான அடித்தளத்தை அமைக்கிறது. இது ஒரு விஷயத்தை ஒப்பீட்டளவில் விரைவாக கற்றுக்கொள்ள உதவுகிறது. இந்த முறையில் பிரத்தியேகமாக படிக்க வேண்டாம். தலைப்புகள் வாரியாக படிக்கும்போது இந்த ஆலோசனைகள் உதவக்கூடும்.
- a. ஒரு வேதாகம அகராதியில் சரிபார்க்க ஒத்த சொற்கள் அல்லது யோசனைகளைப் பற்றி சிந்தியுங்கள்.
b. முக்கிய திறவுகோல் வார்த்தைகளைப் பயன்படுத்தி மற்ற வசனங்களுடன் ஒப்பிடுங்கள்.
c. நீங்கள் எல்லா கோணங்களிலிருந்தும் யோசனையைக் கருத்தில் கொண்டீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
d. தலைப்புகள் பற்றிய துணைநூல்களால் தனிப்பட்ட படிப்பை மாற்றம் செய்ய விடாதீர்கள். - e. ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் முதன்மையாக கவனம் செலுத்தாதீர்கள்.
பொருளுரைத்தல்
பொருளுரைத்தல் என்பது எதையாவது புரியவைக்கக்கூடிய வகையில் அதன் அர்த்தத்தை விளக்குவதாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எழுத்தாளரின் பேனா மூலம் தேவன் என்ன சொல்கிறார்? இந்த படியின் திறவுகோல் கேள்விகளின் பயன்பாடு, குறிப்பாக என்ன மற்றும் ஏன் என்பதாகும். நீங்கள் இந்த தகவலை கர்த்தரிடமிருந்து தெளிவான சொற்களில் சரியான வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டுமானால், உங்களை நீங்களே கேள்வி கேட்டு உரையின் உங்கள் புரிதலை நீங்கள் சவால் செய்ய வேண்டும்.
- இந்த வார்த்தையின் அர்த்தம் என்ன?
a. அதைப் பற்றிய உங்கள் புரிதல் பைபிள் அர்த்தத்தைப் போலவே இருக்கிறதா?
b. முக்கியமான வார்த்தைகளில் நீங்கள் ஒரு சரியான ஒத்த சொல்லை நினைக்க முடியுமா? - b. வார்த்தை அர்த்தத்திற்கு மூன்று அணுகுமுறைகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்: சாதாரண பயன்பாடு (அகராதியில் அது எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?); சூழல் சார்ந்த பயன்பாடு (அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?); ஒப்பீட்டு பயன்பாடு (வேதத்தில் வேறு எங்கும் அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?).
- இந்த அறிக்கை அல்லது செயல் ஏன் வேதத்தில் சேர்க்கப்பட்டுள்ளது?
a. இது நம் புரிதலுக்கு என்ன சேர்க்கிறது?
b. வெளிப்படுத்தப்படாமல் ஏதாவது மறைமுகமாக உள்ளதா? - இந்த அறிக்கை சூழலுடன் என்ன தொடர்பு கொண்டுள்ளது?
a. காரணம் மற்றும் விளைவு என்ன?
b. சிந்தனையின் முன்னேற்றம் என்ன?
c. ஓட்டத்திற்குள் விளக்கம் என்ன?4. உங்கள் மனதில் சூழ்நிலையை நீங்கள் காட்சிப்படுத்தியுள்ளீர்களா?
a. இங்குள்ள நிலைமை என்ன?
b. ஜனங்களின் நிலை எப்படி இருக்கின்றது? - உங்கள் பங்கில் ஏதேனும் ஒருதலைப்பட்சத்தை நீக்க முயற்சித்தீர்களா?
a. இல்லாத ஒன்றை நீங்கள் வசனத்தில் உட்புக செய்கிறீர்களா?
b. நீங்கள் ஆவிக்குரிய விதத்திலும் எழுத்துப்பூர்வ விதத்திலும் நியாயமாக இருந்தீர்களா?
c. நியாயப்படுத்தாமல் பொருந்தக்கூடிய ஒன்றை நீங்கள் நீக்குகிறீர்களா?
d. நீங்கள் ஜெபத்துடன் தேவனுக்குச் செவிகொடுத்து, உங்கள் சிந்தனையைத் திருத்தத் தயாராக இருக்கிறீர்களா?
பிரயோகித்தல்
தனிப்பட்ட பிரயோகித்தலுக்கு மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன: நீங்கள், மற்றவர்களுடனான உங்கள் உறவு, மற்றும் தேவன்.
- உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை. தேவன் விசுவாசிகளின் குணத்தை மாற்றுவதில் ஆர்வமாக உள்ளார், அவர்களை தம்முடைய அன்பின் குமாரனின் சாயலுக்கு ஏற்றதாக வடிவமைக்கிறார்.
a. அவர் நம்மைப் பரிசுத்தமாக்க விரும்பலாம். இது உபத்திரவத்தால் நடைபெறலாம். (1.பேது.1:7, சகரி.13:9). இது சுயநியாயத்தீர்ப்பால் இருக்கலாம் (யாக்.4:8, 1.பேது.1:22).
b. அவர் நம்மை ஊக்குவிக்க விரும்பலாம் (ரோ.15:4). இருண்ட நேரங்கள் தேவனுடைய ஆறுதலினாலும் நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையினாலும் பிரகாசமாக்கப்படலாம்.
c. அவர் நமக்கு வழிகாட்ட அல்லது ஆலோசனை கூற விரும்பலாம் (சங்.119:105). நம்மைச் சுற்றி பல ஆபத்துகள் உள்ளன, மேலும் அவரிடமிருந்து மட்டுமே வரக்கூடிய ஞானம் நமக்குத் தேவை (யாக்.1:5). - மற்றவர்களுடனான உங்கள் உறவு. கவிஞர் சொன்னது போல், எந்த மனிதனும் தனிமையாக ஒரு தனித்தீவாக வாழ்வதில்லை. தேவன் நம்மை சமூக உறவுகளில் வாழச் செய்துள்ளார். இந்தப் பகுதியில் நாம் தேவனை மகிமைப்படுத்த வேண்டும்.
a. அவர் நம் மூலம் ஊழியம் செய்ய விரும்பலாம். சரியான வார்த்தையால் மற்றவர்களை நாம் திருத்தமுடியும் (ஏசா.50:4). அவருடைய நாமத்தில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற் போகான் (மத்.10:42).
b. அவர் நாம் மற்றவர்களுக்கு முன் தாழ்த்திக்கொள்ள விரும்பலாம் (1.பேது.5:5-6). பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
c. அவர் தம்முடைய வார்த்தைகளை மற்றவர்களுடன் பேச விரும்பலாம் (தீத்து 2:15). அது எந்த காரியமாக இருந்தாலும், அவரைப் பிரதிநிதித்துவப்படுத்த நாம் அழைக்கப்படுகிறோம். - தேவனைப் பற்றிய நமது எண்ணங்கள். பெரும்பாலும் இவை அவருடைய மகிமைக்கு ஈடுசெய்ய செய்ய முடியாத அளவுக்கு சிறியவை. “கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்.” (சங்.95:3). நாம் அவரைப் பற்றிய அறிவில் வளர வேண்டும்.
a. அவர் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் அறிய வேண்டியிருக்கலாம். அவர் தம்முடைய மகத்துவத்திற்கு தங்கள் கண்களை உயர்த்தும்படி எல்லா இடங்களிலும் மனிதர்களை அழைத்துள்ளார் (ஏசா.40:25-26). அவர் தம்மைப் பற்றி நமக்குச் சொல்ல விரும்பும் எதையும் கவனமாக குறித்துக் கொள்ளுங்கள். அவரைப் பற்றி நாம் அறியக்கூடியது அவ்வளவுதான், அதை அறிந்துகொள்வது மதிப்பு வாய்ந்தது.
b. அவருடைய வழிகளை நீங்கள் அறிய வேண்டியிருக்கலாம். அவற்றை அறியாதவர்களை என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் அதன் விளைவாக பயங்கரமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் பரிதவித்தார். (சங்.95:10). அவருடைய வழிகள் நம் வழிகள் அல்ல (ஏசா.55:8-9). அவை எங்கே வித்தியாசமாக இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்து அதற்கேற்ப செயல்பட வேண்டும்.
c. நீங்கள் அவருடைய முகத்தை விசுவாசத்தால் பார்க்க வேண்டியிருக்கலாம். இது கர்த்தருடைய பிரசன்னத்தைப் பேசுகிறது. அவருடைய முகம் நம்மிடமிருந்து மறைக்கப்படும்போது நாம் கலங்குகிறோம் (சங்.27:9, 69:17). அவருடைய முகம் நம் மீது பிரகாசிக்கும்போது நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம் (சங்.119:135).
தேவனுடைய ஆவியானவர் உங்கள் ஆத்துமாவுடன் பேச அனுமதிக்கும் வரை உங்கள் படிப்புடன் உறுதியாக இருங்கள். நீங்கள் எந்த வழியில் சவால் செய்யப்பட்டீர்கள்? எல்லா வேதவாக்கியங்களும் “உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. (2.தீமோ.3:16). அது உங்களில் அவ்வாறு செயல்படட்டும்!
பாடம் 2 ற்க்கான கேள்விகள்
இந்த பயிற்சியில், பாடம் 1 மற்றும் 2 இன் குறிப்புகளில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள வேதாகம ஆய்வு கொள்கைகளை நீங்கள் பயிற்சி செய்வீர்கள். குறிப்புகளை கவனமாகப் படித்து, லூக்கா 12:22-31 இன் ஆய்வில் பின்வரும் படிகளைப் பயன்படுத்துங்கள்.
- ஆயத்தம். பாடம் 1 இன் குறிப்புகளில் ஆன்மீக தேவைகள் என்ற சரிபார்ப்புப் பட்டியலை மதிப்பாய்வு செய்யவும்.
- கவனித்தல் (இந்த பகுதி என்ன சொல்கிறது?) லூக்கா 12:22-31ஐ பலமுறை வாசித்து, பகுதியுடன் உங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். பின்னர், முக்கியமான விவரங்களைக் கவனித்து, பகுதியை இன்னும் பல முறை வாசிக்கவும். முக்கிய வார்த்தைகள், முக்கியமான இணைப்புச் சொற்கள், முரண்பாடுகள், ஒப்பீடுகள், எடுத்துக்காட்டுகள், கருத்துகளின் மறுபடியும் முன்னேற்றமும், வினைச்சொற்கள் மற்றும் கேள்விகள் அல்லது அழுத்தமான அறிக்கைகளின் பயன்பாடு ஆகியவற்றைப் பாருங்கள். உங்கள் கண்டுபிடிப்புகளை கவனிப்புகள் என்று பெயரிடப்பட்ட நெடுவரிசையில் கீழே பதிவு செய்யவும். பகுதியைக் கவனிப்பதற்கு போதுமான நேரத்தைச் செலவிடுங்கள். உங்களால் முடிந்தவரை பல கவனிப்புகளை பட்டியலிடுங்கள், தேவைப்பட்டால் கூடுதல் தாள்களைப் பயன்படுத்தவும்.
| வச. | கவனிப்புக்கள் | வச. | கேள்விகள் |
|
|
- பொருளுரைத்தல் (பகுதி என்ன அர்த்தப்படுத்துகிறது?)
- a. அதன் அர்த்தத்தைப் பற்றி சிந்திக்க உதவும் கேள்விகளால் பகுதியை நிரப்புங்கள். பின்வரும் வடிவத்தின் கேள்விகளை முயற்சிக்கவும்: …இன் அர்த்தம் என்ன? இயேசு ஏன் … சொல்கிறார்? … என்பதன் அர்த்தம் என்ன? …க்கும் …க்கும் உள்ள உறவு என்ன? கேள்விகள் என்று பெயரிடப்பட்ட நெடுவரிசையில் உங்களால் முடிந்தவரை பல முக்கியமான கேள்விகளைப் பதிவு செய்யவும். தேவைப்பட்டால் கூடுதல் காகிதத்தைப் பயன்படுத்தவும்.
- b. ஒவ்வொரு வசனத்தின் சரியான அர்த்தத்தையும் தேடுங்கள். ஒரு தனி தாளில், முக்கியமான வார்த்தைகளை வரையறுத்து, சூழல் மற்றும் இணைகுறிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் மிக முக்கியமான கேள்விகளில் பலவற்றிற்கு பதிலளிக்கவும்.
- c. பின்வரும் வசனக்குழுக்களில் ஒவ்வொன்றின் அர்த்தத்தைப் பற்றிய உங்கள் நுண்ணறிவுகளை சுருக்கமாக இரண்டு அல்லது மூன்று வாக்கியங்களை எழுதுங்கள்.
வச.22-23
வச. 24
வச. 25-26
வச. 27-28
வச. 29-31
- பிரயோகித்தல் (நான் பகுதியை எப்படிப் பிரயோகிப்பேன்?)
- a. இந்தப் பகுதி உங்கள் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமானது?
- b. இயேசுவின் இந்தப் போதனை உங்கள் அன்றாட வாழ்வில் எப்படிச் செயல்படுகிறது (அல்லது செயல்படவில்லை)?
- c. இந்தப் பகுதியை உங்கள் வாழ்க்கையில் எப்படிப் பிரயோகிப்பீர்கள்? குறிப்பாகச் சொல்லுங்கள்.









