• பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
Sunday, November 9, 2025
  • Login
Tamil Christian Assembly
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
Tamil Christian Assembly
No Result
View All Result

10. விசுவாசத்தினால் நாம் இரட்சிக்கப்படுவதேன்?

April 3, 2016
in எல்லாம் கிருபையே, கிறிஸ்தவ நூற்கள்
0 0
00. கிருபையின் மாட்சி
  1. விசுவாசத்தினால் நாம் இரட்சிக்கப்படுவதேன்?

இரட்சிப்பைப் பெற விசுவாசமே தேவை என ஏன் தெரிந்துகொள்ளப்பட்டது? இக்கேள்வி அடிக்கடி எழலாம். ‘கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்” என்பது நிச்சயமாகவே பரிசுத்தவேதத்தின் கோட்பாடாகவும், தேவ நியதியாகவும் உள்ளது. அது என்ன காரணம்? விசுவாசத்தை விடுத்து நம்பிக்கை, அன்பு, பொறுமை இவற்றில் ஏதாவதொன்றைத் தெரிந்துகொண்டிருக்கலாமே?

தேவனுடைய வழிகளை நாம் புரிந்துகொள்ளமுடியாதாகையாலும், அவற்றைக் குறித்து நாம் துணிவுடன் வினாக்கள் எழுப்ப நமக்கு அனுமதியில்லையென்பதாலும் இத்தகைய கேள்விக்கு நாம் பணிவுடன் விடை காண்பது நலம். கிருபையை ஏற்கும் பாதையாக விசுவாசம் தெரிந்துகொள்ளப்பட்டது. ஏனெனில் அவ்விதம் பெற்றுக்கொள்ளும் கையாகப் பயன்படுத்துவதற்கு இயற்கையான பொருத்தம் விசுவாசத்தில் உண்டென நாம் தாழ்மையுடன் விடை பகரலாம். ஒரு பிச்சைக்காரனுக்கு நான் தருமம் செய்யவிரும்புகிறேன்னென்று வைத்துக்கொள்ளுங்கள். காசை நான் அவன் கரத்தில் வைக்கிறேன். ஏன்? அவன் காது அல்லது காலில் பணத்தை வைத்தால் அது பொருத்தமாயிராது. பெற்றுக்கொள்ளுவதற்காகவே கை இருப்பதுபோல் தோன்றுகிறது. இவ்வண்ணமே நம் சிந்தை அமைப்புக்கு வாங்கிக்கொள்ளும் சாதனமாயிருக்க விசுவாசம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மனிதனின் கையாக விளங்கும் அதன் வழியாகக் கிருபையைப் பெற்றுக்கொள்ளுதல் ஏற்றதாயுள்ளது.

ஒரு மாம்பழத்தை உங்கள் பிள்ளையின் முன்னால் நீட்டி, அவனுக்குத் தருவதாய் நீங்கள்கூறினால், பிள்ளை உங்களிடம் எவ்விதம் வந்த கனியைப்பெறுவானோ, அதை ஒத்ததாயிருக்கிறது விசுவாசம். மாம்பழத்துக்கு குழந்தையின் கை எப்படியோ அப்படியேதான் கிறிஸ்துவின் பூரண இரட்சிப்புக்கு உங்கள் விசுவாசம் அமைந்துள்ளது. குழந்தையின் கை மாம்பழத்தைச் செய்வதில்லை, பழத்தை எவ்வகையிலும் அதுமேலும் சிறப்புறும்படி மாற்றுவதில்லை. விசுவாசமும் இரட்சிப்பை உண்டாக்குவதாகவோ அல்லது உதவுவதாகவோ பாசாங்கு புரியாமல், அதைத் தோர்ந்தெடுத்துள்ளார். விசுவாசமானது, மன்னிப்பைக் கோரும் நாவாக, அதைப் பெறும் கரமாக, அதைக் காணும் கண்ணாக இருப்பினும், அதைக் கொள்ளும் விலையாக இல்லை. விசுவாசம் தனக்கே உரியதாக எந்த மன்றாட்டையும் செய்யாமல், கிறிஸ்துவின் இரத்தத்தின்மேல் தன் வாதங்களையெல்லாம் சுமத்திவிடுகிறது. ஆண்டவரான இயேசுவின் ஐசுவரியங்களை ஆத்துமாவுக்குக் கொண்டு வருகையில் அவற்றைத் தான் எங்கிருந்து பெற்றதென்றும் கிருபையே அவற்றைத் தன்னிடம் ஒப்படைத்ததென்றும் விசுவாசம் உணருவதால், அது நல்ல ஊழியனாக விளங்குகிறது.

எல்லா மகிமையும் அது தேவனுக்கே செலுத்துவதால், விசுவாசம் தேர்ந்தெடுக்கப்பட்டதென்று தெளிவாய்க் கூறலாம். விசுவாசத்தினாலேயே அது கிருபையால் ஆயிற்றென்றும், கிருபையினாNலுயே அங்கே பெருமை பாராட்டுதல் இல்லையென்றும்கொள்ளலாம். ஏனெனில், தேவன் பெருமையை வெறுக்கிறார். ‘மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்” என்பதால், அவர்களுக்கு அருகில் செல்ல விருப்பமில்லை. பெருமையை உண்டாக்கும் வகையில் அவர் இரட்சிப்பை அருளமாட்டார். ‘ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியையினால் உண்டானதல்ல” என்று பவுல் கூறுகிறார். விசுவாசம் பெருமை பாராட்டலைத் தவிர்க்கிறது.’இப்பொருளைப் பெற்றுக்கொள்ளுவதால் எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்” என்று தருமம் பெறும் கரம்கூறுமானால், அது அசட்டுத்தனமாயிருக்கும். ஆகாரத்தை வாய்க்குக் கொண்டுசெல்லும் கையானது சரீரத்தை நோக்கி, ‘எனக்கு நன்றி கூறு. உனக்குப் புசிக்கத் தருவது நான்” என்று கூறுவதில்லை. கரம் புரிவது சாதாரண செயலே எனினும், அது மிக முக்கியமான காரியமாகும். அதனால் தான் செய்வதினிமித்தம் தனக்கு மகிமை ஏற்படவேண்டுமென்று அது உரிமை பாராட்டுவதில்லை. தான் எந்தப் பாராட்டுதலையும் ஏற்காமல், சகல நன்மைகளையும் அளிப்பவரான இரக்கமுள்ள தேவனையே ஆராதிக்கவேண்டுமென்று விசுவாசம் இருப்பதால் சொல்லிமுடியாத தமது ஈவான கிருபையைப் பெறுவதற்கு விசுவாசமே ஏற்றதென ஆண்டவர் தெரிந்துகொண்டார். தகுதி வாய்ந்த சிரசின் மீது விசுவாசம் மகுடத்தை வைப்பதால், ஆண்டவரான இயேசுவும் விசுவாசத்தின் சிரசில் கிரீடத்தைத் தரித்து, ‘உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ” என்பது வழக்கமாயிருந்தது.

அடுத்தபடியாக, தேவனையும் மனிதனையும் இணைப்பதற்கு நிச்சயமான வழியாக விசுவாசம் இருப்பதால், இரட்சிப்பின் கால்வாயாக அது பயன்படுத்தப்படுகிறது. தேவனிடம் தன் அந்தரங்கங்களை மனிதன் வெளியிடும்போது, அவர்களிடையே ஐக்கியம் ஏற்படுவதால், அந்த ஐக்கியம் ஆசீர்வாதத்திற்கு உத்தரவாதமாயுள்ளது. நாம் தேவனிடம் சார்ந்திருக்கும்படி விசுவாசம் ஏவுவதால் அதுவே நம்மை இரட்சித்து, இவ்வகையில் நம்மை ஆண்டவரோடு சம்பந்தப்படுத்துகிறது. பின்வரும் உதாரணத்தை நான் பலமுறை கையாண்டிருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்னர், நயாகரா நீர்வீழ்ச்சிக்குமேல் சென்று கொண்டிருந்தபடகு ஒன்று கவிழ்ந்து, அதிலிருந்த இரண்டு மனிதர் தண்ணீரின் போக்கில் அடித்துச்செல்லப்பட்டனர். கரையிலிருந்தவர்கள் ஒரு கியிற்றை அவர்களிடம் வீசியெறிந்ததும், இருவரும் அதைப்பற்றினர். அதை இறுகப்பிடித்துக்கொண்டிருந்த ஒருவன் பத்திரமாகக் கரையேற்றப்பட்டான். அடுத்தவனோ, ஒரு பெரிய மரத்துண்டு அவ்வழியே மிதந்து வருதலைக் கண்டு, கயிற்றைவிட அது பெரியதாயிருந்ததாலும், பற்றிக்கொள்ள இலகுவாயிருந்ததாலும், மடத்தனமாகக் கயிற்றை விட்டுவிட்டுக் கட்டையைப் பிடித்துக்கொண்டான். அந்தோ! மரத்துண்டுக்கும் கரைக்கும் இடையில் எந்த பிணைப்பும் இராதபடியால், மனிதனும் மரக்கட்டையும் பெரும் நீர்க்குழியில் இறங்கினர். மரத்துண்டு பெரிய அளவு அதைப் பிடித்துக்கொண்டவனுக்கு ஒரு நன்மையையும் புரியவில்லை. பாதுகாவல் கிடைப்பதற்கு அதற்குக் கரைக்கும் ஓர் இணைப்பு இருக்கவேண்டிருயிருந்தது. எனவே, ஒரு மனிதன் தன் கிரியைகளையோ, அல்லது சடங்குகளையோ, அல்லது வேறெதனையோ சார்ந்திருப்பின் அவன் இரட்சிக்கப்பட்டான். ஆனால் விசுவாசமோ, அது மெல்லிய நூல்போல் தோன்றினும், கரையிலிருந்து மகத்தான ஆண்டவரின் கரத்திலிருப்பதால், அளவிடற்கரிய வல்லமையானது இணைப்புக்கயிற்றை இழுத்து மனிதனை நாசத்தினின்று இரட்சித்துவிடுகிறது. தேவனிடம் நம்மைப் பிணைக்கும் விசுவாசத்தின் ஆசீர்வாதம்தான் எத்தகையது!

செயலில் இறங்கும் விசைகளைத் தொடுவதாலும் விசுவாசம் தெரிந்துகொள்ளப்பட்டுள்ளது. சாதாரண காரியங்களிலும் கூட ஒருவகை விசுவாசம் செயல்புரியத் தூண்டுகோலாக அமைகிறது. ஏதோ ஒருவித நம்பிக்கையால் உந்தப்பட்டுத் தான் நாம் எந்தக் கரியத்தையுமே செய்கிறோமென்று நான் கூறினால் அது தவறாகாதென எண்ணுகிறேன். ஆகாரத்தின் அவசியத்தை நம்புவததால்தான் ஒரு மனிதன் அதை அருந்துகிறான். பணத்தின் அருமையில்நம்பிக்கை வைத்திருப்பதால் அவன் தொழிலுக்குச் செல்கிறான். ஒரு செக்கை அவன் பெறுகையில், பாங்கு அதற்கு ஈடாகப் பணம் தருமெனும் நம்பிக்கை அவனுக்கு உண்டு. சமுத்திரத்துக்கு அப்பால் பிறிதொரு கண்டம் உளது என்று எண்ணம் கொண்டதால்தான் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தான். அந்த மலைப்பாங்கான பிரதேசத்தில் கடவுள் தங்களோடிருப்பார் என்ற நம்பிக்கையுடையவர்களாய் யாத்ரீகப் பிதாக்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். அநேக அருஞ்செயல்கள் நம்பிக்கையினிமித்தம் உருவானதுண்டு. நம்பிக்கை யாரிடம் குடிகொண்டுள்ளதோ, அம்மனிதனில் நன்மைக்கோ, அல்லது தீமைக்கோ, வியத்தகு காரியங்களை அது செய்துவிடுகிறது. சாதாரண தோற்றத்திலிருக்கும் நம்பிக்கையானது எங்கும் வியாபித்திருக்கும் சக்தியாயிருந்து, மனிதனால் செய்யப்படும் எல்லாக் காரியங்களிலும் இடம்பெற்றுவிடுகிறது. நம்மில் நம்பிக்கையைப் பிறப்பிக்கும் தேவன், அதன்மூலம் நம் உணர்ச்சிகளுக்கும் செயல்களுக்கும் ஏதுவான உண்மையான முக்கிய விரையைத் தொட்டுவிடுகிறாராகையால், அவர் விசுவாசத்துக்கு இரட்சிப்பை அருளுகிறார். மின் சக்தியை வைத்திருக்கும் அவர் நம்மிலுள்ள எல்லாப் பாகங்களுக்கும் இப்போது மின்சக்தியை அனுப்பவல்லவராயிருக்கிறார் எனலாம். நாம் கிறிஸ்துவில் விசுவாசம் கொண்டு, நமது உள்ளம் தேவன் வசமாகும்போது, நாம் பாவத்தினின்று மீட்கப்பட்டு, மனந்திரும்புதல், பரிசுத்தத் தன்மை, ஆர்வம், ஜெபம், நம்மை ஆண்டவருக்கு அர்ப்பணித்தல் இவைபோன்ற சகல மேலான காரியங்களுக்கும் ஏவப்படுவோம், ‘சக்கரங்களுக்கு எண்ணெய் எப்படியோ” ஒரு கடிகாரத்துக்கு எடை எப்படியோ, ஓரு மரக்கலத்துக்குப் பாய்மரம் எப்படியோ, அப்படியே விசுவாசமும் சகல பரிசுத்த கடமைகளுக்கும் பணிகளுக்கும் மையமாய் உள்ளது”. விசுவாசத்தை உடையவர்களாயிருப்பீர்களெனில், எல்லா நற்பண்புகளும் தங்கள் போக்கைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கும்.

தவிர, அன்பினால் இயங்கும் வல்லமை விசுவாசத்துக்கு உண்டு. தேவனிடம் அன்பு செலுத்த அது ஏதுவாயிருப்பதோடுகூட, சிறப்பான காரியங்களின் பால் உள்ளம் நாட்டம் கொள்ளுச்செய்கிறது. தேவனிடம் நம்பிக்கையுடையவன் ஐயமின்றி அவரில் அன்புகொள்வான். புரிந்துகொள்ளுதலின் விளைவே விசுவாசமென்றாலும் அது உள்ளத்தினின்று புறப்படுகிறது. ‘நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும்” அன்புக்கு அடுத்து வாழ்வதாலும், அன்பை நெருங்கியிருப்பதாலும் தேவன் விசுவாசத்துக்கு இரட்சிப்பை ஈகிறார். புனிதமான எண்ணம், செயல் யாவுக்கும் அன்பே ஈன்ற அன்னையும், பேணும் தாதியுமாயுள்ளது. தேவனில் அன்பு கொளு;தல் கீழ்ப்படிதலும் பரிசுத்தத் தன்மையும் ஆகும். தேவனையும் மனிதனையும் நேசித்தல் கிறிஸ்துவின் தன்மைக்கு ஒத்ததாயிருப்பதால் இதுவே இரட்சிப்பு.

மேலும், விசுவாசம், சமாதானத்தையும் ஆனந்தத்தையும் தோற்றுவிக்கிறது. அதைப் பெற்றிருப்பவன், அமைதியோடும் , சாந்தியோடும், களிப்போடும், மனரம்மியத்தோடும் இருப்பதால் இது விண்ணுலகுக்கு உரிய ஆயத்தமாயிருக்கிறது. சிறந்த மேல் உலகில் என்றென்றும் வெளிப்படுத்தப்படவேண்டிய ஜீவனையும் ஆவியையும், விசுவாசம் நம்மில் கிரியை செய்வதால், பல காரணங்களோடு ஒன்றான இக்காரணத்தினிமித்தம், தேவன் விசுவாசத்துக்கு விண்ணுலக ஈவுகள் எல்லூவற்றையும் அளிக்கிறார். இவ்வுலக வாழ்வுக்கு அவசியமான பயிற்சியையும் விசுவாசம் நமக்கு வழங்குகிறது. அச்சமின்றி வாழவும், பயமில்லாது மரணத்தை ஏற்கவும் அதனால் மனிதனுக்குச் சாத்தியமானது. செயல்படவும், வேதனைக்குச் சித்தமாயிருக்கவும், அது மனிதனைத் தயாராக்குகிறது. இதினிமித்தமே தேவன், கிருபையை அவரிடமிருந்து பெற்று மனிதனிடம் தருவதற்கு விசுவாசமே மிக எற்றதென்று கண்டு அதைத் தேர்ந்தெடுத்து, நம்மை மகிமைக்குத் தகுந்தவர்களாக்கிக்கொண்டார்.

மெய்யாகவே விசுவாசமானது, வேறெதனாலும் செய்ய மாட்டாததைச் செய்கிறது. நமக்கு மகிழ்வையும் சாந்தியையும் அளித்து நாம் அமர்ந்திருக்கப் பண்ணுகிறது. வேறெந்த வகையினாலாகிலும் பெறவேண்டுமென்று மாந்தர் முயற்சிப்பதேன்? ஒரு பழைய உதாரணம் பின்வருமாறு: ‘ஒரு கதவைத் திறக்குமாறு ஏவியபோது ஓர் அறிவற்ற பணியாள் தன் தோளைக்கொண்டு, தன் முழுப்பலத்தையும் பிரயோகித்துக் கதவைத் தள்ளப் பார்த்தான். ஆனால் கதவு திறக்கவில்லையாதலின், அவன் எவ்வளவோ பலத்துடன் முயற்சித்தும் அறைக்குள் செல்லக் கூடவில்லை. வேறொருவன் ஒரு சாவியுடன் வந்து சுலபத்தில் பூட்டைத் திறந்து உள்ளே செல்கிறான். கிரியைகளினால் இரட்சிப்பைப்பெறவேண்டுவோர், பரலோக வாயிலைப் பயனற்ற முறையில் தள்ளிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் விசுவாசம் என்னும் திறவுகோல் இருக்குமெனில், வாசல் உடனே திறந்துகொள்ளும்.

வாசகரே! நீங்கள் அச்சாவியைப் பயன்படுத்தமாட்டீர்களா? தம் அருமைக் குமாரனில் நீர் விசுவாசம் வைக்க வேண்டுமென்று தேவன் கட்டளையிடுவதால் நீங்கள் அவ்விதமே பணிந்து ஜீவனை அடையலாம். ‘விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்” (மாற்கு 16:16). என்று சுவிசேஷத்தில் வாக்கருளப்படவில்லையா? இரக்கமுள்ள தேவனின் கருணைக்கும் ஞானத்துக்கும் தத்தம் செய்யும் இரட்சிப்பின் வழியில் செல்ல உங்களுக்கு ஏன் இன்னும் தயக்கம்?

ShareTweetPin

Related Posts

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

12. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

11. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

10. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

09. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில்...

Next Post
00. கிருபையின் மாட்சி

11. என்னால் ஒன்றும் செய்யக்கூடாது!

00. கிருபையின் மாட்சி

12. விசுவாசத்தின் வளர்ச்சி

Recommended

Song 213 – Sabikapadda

00. கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

12. வென்றேறிச் செல்லல்

Song 028 – Thollai

Song 190 – Nanri

Categories

  • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
  • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • ஆராதனை கீதங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
  • உட்காரு – நட – நில்
  • உண்மையான சீஷத்துவம்
  • எல்லாம் கிருபையே
  • எஸ்தர்
  • எஸ்றா
  • கிருபையின் மாட்சி
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
  • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • துண்டுப் பிரதிகள்
  • தொகுக்கப்படாதவைகள்
  • நெகேமியா
  • பாக்கியவான்கள் யார்?
  • பாடல் புத்தகம்
  • பிரசங்கங்கள்
  • மாணவர் வழிகாட்டி
  • மிஷனறிகள்
  • மோட்சப் பயணம்
  • வேதாகம ஆய்வு

Instagram

நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் –  தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்…. 

தின தியானங்கள்

பாலைவன நீரோடைகள் – அன்றாடக அமுதம் – விசுவாச தினதியானம் – இன்றைய இறைத்தூது
நாளுக்கொரு நல்ல பங்கு 2022 – நாளுக்கொரு நல்ல பங்கு 2023 – நாளுக்கொரு நல்ல பங்கு 2024 – நாளுக்கொரு நல்ல பங்கு 2025

வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி  – வேதாகம நூல்கள்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)

Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.