உன்னை அழைக்கும் இயேசுவின்
சத்தத்தை நீ கேளாயோ
உன்னைத் தேடி வரும் இயேசுவை
உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளாயோ (2)
உன் பாவ பாரமெல்லாம்
தன் தோளில் சுமந்தாரே (2)
அவர் பட்ட காயம் நீ செய்த பாவம்
ஆனாலும் அழைக்கிறார் வா (2)
(உன்னை அழைக்கும்…….)
ஐங்காயம் அடைந்தாரே
சிலுவையில் மரித்தாரே (2)
அவர் பட்ட பாடு உனக்காகத்தானே
உள்ளம் கலங்காதே வா (2)
(உன்னை அழைக்கும்…….)
பேர் சொல்லி அழைத்தாரே
இரத்தத்தால் மீட்பு கொண்டாரே
கரங்களை நீட்டி அன்போடு உன்னை
அழைகிறார் இப்போதே வா
(உன்னை அழைக்கும்…….)













