காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே
காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே
அல்லேலூயா பாடிப் பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்
அல்லேலூயா பாடிப் பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்
நம்பி வா இயேசுவை
இயேசுவை நம்பி வா
நம்பினேன் இயேசுவை
இயேசுவை நம்பினேன்
நிந்தனைகள் போராட்டம் வந்தாலும்
நீதியின் தேவன் தாங்கினாரே
நிந்தனைகள் போராட்டம் வந்தாலும்
நீதியின் தேவன் தாங்கினாரே
நேசக்கொடி என்மேல் பறக்க
நேசருக்காய் ஜீவித்திடுவேன்
நேசக்கொடி என்மேல் பறக்க
நேசருக்காய் ஜீவித்திடுவேன்
நம்பி வா இயேசுவை
இயேசுவை நம்பி வா
நம்பினேன் இயேசுவை
இயேசுவை நம்பினேன்
கன்மலைகள் நொறுங்கும்படியாய்
கர்த்தர் என்னை கரம் பிடித்தார்
கன்மலைகள் நொறுங்கும்படியாய்
கர்த்தர் என்னை கரம் பிடித்தார்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகுபோல எழும்பிடுவேன்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகுபோல எழும்பிடுவேன்
நம்பி வா இயேசுவை
இயேசுவை நம்பி வா
நம்பினேன் இயேசுவை
இயேசுவை நம்பினேன்
அத்திமரம் துளிர்விடாமல்
ஆட்டு மந்தை முதலற்றாலும்
அத்திமரம் துளிர்விடாமல்
ஆட்டு மந்தை முதலற்றாலும்
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை
நம்பி வா இயேசுவை
நம்பி வா இயேசுவை
இயேசுவை நம்பி வா
நம்பினேன் இயேசுவை
இயேசுவை நம்பினேன்













