சொந்தம் என்று சொல்லிக்கொள்ள
உம்மைவிட யாரும் இல்ல
சொத்து என்று அள்ளிக் கொள்ள
உம்மைவிட்டால் ஏதும் இல்ல
(சொந்தம் என்று……)
இயேசுவே இயேசுவே
எல்லாம் இயேசுவே (2)
(சொந்தம் என்று…..)
உம் கிருபையினால் நான் பிழைத்துக்கொண்டேன்
உம் பாசத்தினால் நான் திகைத்துப்போனேன் (2)
நான் திகைத்துப்போனேன் நான் திகைத்துப்போனேன்
(இயேசுவே இயேசுவே……)
உம் தழும்புகளால் நான் சுகமானேன்
உம் வார்த்தையினால் நான் பெலனானேன் (2)
நான் பெலனானேன் நான் பெலனானேன்
(இயேசுவே இயேசுவே……)














