ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஐனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும் – ஆ……. (2)
மகிமைப் படுத்துவேனென்றாரே
மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
கறையில்லா தேவனின் வாக்கு – ஆ……. (2)
ஆதி நிலை எகுவோமே
ஆசீர் திரும்பப் பெறுவோம்
பாழான மண்மேடுகள் யாவும்
பாராளும் வேந்தன் மனையாகும்
சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும் — ஆ… (2)
விடுதலை முழங்கிடுவோமே
விக்கினம் யாவும் அகலும்
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
இரட்சகர் மீட்பருள்வாரே
நுகங்கள் முறிந்திடும் கட்டுகளறுந்திடும்
விடுதலைப் பெருவிழா காண்போம் – ஆ……. (2)
யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாகத் தேவன் அருள்வார் – ஆ (2)
ஆறாத காயங்கள் ஆறும்
ஆரோக்கியம் வாழ்வினில் மூடும்
ஆற்றியே தேற்றும் நல்நாதர்
போற்றியே பாதம் பணிவோம்
அனாதி தேவனே அடைக்கலம் பாரினில்
அனாதையாவதே இல்லை – ஆ…. (2)
பார் போற்றும் தேவன் நம் தேவன்
பாரினில் வேறில்லை பாக்யம்
நீர் எந்தன் ஐனங்கள் என்றாரே
வேறென்ன வாழ்வினில் வேண்டும்
பிள்ளைகளும் சபையும் பிதா முன்னே நிலைக்கும்
பரிசுத்தர் மாளிகை எழும்பும் – ஆ……. (2)
(ஆனந்த துதி ஒலி…….)












