ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு
விசுவாசக் கண்ணால் காண்கிறோம்
நம் பிதா அழைக்கும் பொழுது
நாம் அங்கே வசிக்கச் செல்லுவோம்
இன்பராய்……. ஈற்றிலே…….
மோட்சக்கரையில் நாம் சந்திப்போம்
இன்பராய்……. ஈற்றிலே…….
மோட்சக்கரையில் நாம் சந்திப்போம்
அந்த வான் கரையில் நின்று நாம்
விண்ணோர் கீதங்களைப் பாடுவோம்
துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து
சுத்தரின் ஆறுதல் அடைவோம்
இன்பராய்……. ஈற்றிலே…….
மோட்சக்கரையில் நாம் சந்திப்போம்
இன்பராய்……. ஈற்றிலே…….
மோட்சக்கரையில் நாம் சந்திப்போம்
அந்த மோட்சகரையடைந்து
வானசேனையுடன் களிப்போம்
நம் தொல்லை யாத்திரை முடித்து
விண் கிரீடத்தை நாம் தரிப்போம்
இன்பராய்……. ஈற்றிலே…….
மோட்சக்கரையில் நாம் சந்திப்போம்
இன்பராய்……. ஈற்றிலே…….
மோட்சக்கரையில் நாம் சந்திப்போம்
நம் பிதாவின் அன்பை நினைந்து
அவரால் மகிழ்ந்து பூரிப்போம்
மீட்பின் நன்மைகளை உணர்ந்து
அவரை வணங்கித் துதிப்போம்
இன்பராய்……. ஈற்றிலே…….
மோட்சக்கரையில் நாம் சந்திப்போம்
இன்பராய்……. ஈற்றிலே…….
மோட்சக்கரையில் நாம் சந்திப்போம்
அங்கே நமது ரட்சகர் என்றென்றும்
ஆளுகை செய்து வீற்றிருப்பார்
துக்கம் நோய் சாவுகள் நீங்கிடும்
தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார்
இன்பராய்……. ஈற்றிலே…….
மோட்சக்கரையில் நாம் சந்திப்போம்
இன்பராய்……. ஈற்றிலே…….
மோட்சக்கரையில் நாம் சந்திப்போம்
ஏழைக்கும் மாளிகை அங்குண்டு
என்று நம் மீட்பர் அழைக்கிறார்
மாந்தர் யாவருக்கும் இடமுண்டு
எல்லோரும் வாருங்கள் என்கிறார்
இன்பராய்……. ஈற்றிலே…….
மோட்சக்கரையில் நாம் சந்திப்போம்
இன்பராய்……. ஈற்றிலே…….
மோட்சக்கரையில் நாம் சந்திப்போம்













