குருசினில் தொங்கி குருதியும் வடிய
கொல்கொதா மலை தனிலே – நம்
குரு இயேசு ஸ்வாமி கொடுந்துயர் பாவி
கொள்ளாய் கண் கொண்டு
சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே
சிலுவையில் சேர்த்தைய்யோ – தீயர்
திருக் கரங் கால்களில் ஆணிகளடித்தார்
சேனைத்திரள் சூழ
(குருசினில் தொங்கி…….)
பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன் போல் தொங்க – யூத
பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
படுத்திய கொடுமைதனை
(குருசினில் தொங்கி…….)
சந்திர சூரிய சகல வான் சேனைகள்
சகியாமல் நாணுதையோ – தேவ
சுந்தர மைந்தன் உயிர் விடும் காட்சியால்
துடிக்கா நெஞ்சுண்டோ
(குருசினில் தொங்கி…….)
ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே – அவன்
தீட்டிய தீட்சைக் குருதியும் ஐலமும்
திறந் தூற் றோடுது பார்
(குருசினில் தொங்கி…….)
எருசலேம் மாதே பதறி நீ யழுது
ஏங்கிப் புலம்பலையோ – நின்
எருசலையதிபன் இளமணவாளன்
எடுத்த கோலமிதோ
(குருசினில் தொங்கி…….)












