- கேளாதே:
என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளை விட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேளாதே. (நீதி.19:2
- நினையாதே:
அச்சமின்றி உன்னிடத்தில் வாசம் பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாகத் தீங்கு நினையாதே. (நீதி.3:29)
- எண்ணாதே:
(1) என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே…. (நீதி.3:11)
(2) நீ உன்னை ஞானியென்று எண்ணாதே,…. (நீதி.3:7)
- சொல்லாதே:
(1) உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த்திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே. (நீதி.3:28)
(2) அவன் எனக்குச் செய்தபிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்த செய்கைக்குத் தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே. (நீதி.24:29)
- பேசாதே:
நியாயமின்றிப் பிறனுக்க விரோதமாய்ச் சாட்சியாக ஏற்படாதே: உன் உதடுகளினால் வஞ்சகம் பேசாதே. (நீதி.24:28)
- சாராதே:
….., சுயபுத்தியைச் சாராதே. (நீதி.23:4)
- சேராதே:
(1) மதுபானப்பியனையும் மாம்சப்பெருந்தீனிக்காரரையும் சேராதே. (நீதி.23:4)
(2) பரஸ்திரியின் வாசலைக் கிட்டிச்சேராதே. (நீதி.5:8)
- விடாதே:
(1) பிள்ளையைத் தண்டியாமல் விடாதே. (நீதி.23:13)
(2) உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமை கொள்ள விடாதே (நீதி.23:17)
(3) உன் இருதயத்திலே பரஸ்தரியின் அழகை இச்சியாதே: அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே. (நீதி.6:25)
(4) புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே…. (நீதி.4:13)
(5) உன் சிநேகிதனையும், உன் தகப்பனுடைய சிநேகிதனையும் விட்டுவிடாதே: (நீதி.27:10)
- இடங்கொடாதே:
உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே,… (பிர.5:6)
- தாமதியாதே:
நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே,… (பிர.5:4)
- சம்மதியாதே:
என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே. (நீதி.1:10)
- கொள்ளாதே:
(1) உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே,… (பிர.7:9)
(2) பொல்லாத மனுஷர்மேல் பொறாமை கொள்ளாதே… (நீதி.24:1)
(3) கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே.. (நீதி.3:31)
(4) திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே. (நீதி.23:10)
- தள்ளாதே:
என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. (நீதி.1:8)
- நில்லாதே:
(1) ராஜாவின் சமூகத்தில் மேன்மை பாராட்டாதே: பெரியோர்களுடைய ஸ்தானத்தில் நில்லாதே. (நீதி.25:8)
(2) பொல்லாத காரியத்திலே பிடிவாதமாய் நில்லாதே,.. (பிர.8:3)
- நடவாதே:
(1) ….. தீயோருடைய வழியில் நடவாதே. (நீதி.4:14)
(2) …. உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே. (நிதி.22:24)
- விரும்பாதே:
தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்… (நீதி.20:13)
- கொள்ளையிடாதே:
ஏழையாயிக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே! (நிதி.22:22)
- எரிச்சலாகாதே:
பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே (நீதி.24:19)
- வழக்காடாதே:
ஒருவன் உனக்கு தீங்குசெய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே வழக்காடாதே. (நீதி.3:30)
- விற்காதே:
சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே… (நீதி.23:23)













