புது வாழ்வு வாழ்ந்திடுவேன்
புது வாழ்வு வாழ்ந்திடுவேன்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
தேவனைப் பாடிடுவேன் (2)
தேவன் தந்த வார்த்தையே
ஜீவன் வல்லமை தரும் (2)
எந்நாளும் அதையே முற்றிலும் நம்பி
நல் வாழ்வு வாழ்ந்திடுவேன் (2)
(புது வாழ்வு வாழ்ந்…….)
இதயத்தில் விசுவாசித்தேன்
என் வாயினால் அறிக்கை செய்தேன் (2)
முப்பது அறுபது நூறத்தனையாய்
மகிழ்வோடு அறுத்திடுவேன் (2)
(புது வாழ்வு வாழ்ந்…….)
என் தேவன் இவ்வாண்டிலே
பெரும் காரியம் செய்திடுவார் (2)
என் மூலம் அவர்; தம் நாமத்தினையே
மகிமைப்படுத்திடுவார் (2)
(புது வாழ்வு வாழ்ந்…….)














