இதுவரை செய்த செயல்களுக்காக
இயேசுவே உமக்கு ஸ்தோத்ரம் (1)
(இதுவரை செய்த…….)
உவர் நிலமாக இருந்த என்னை
விளை நிலமாக மாற்றிய உம்மை (2)
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி (1)
(இதுவரை செய்த…….)
தனிமரமாக இருந்த என்னை
கனிமரமாக மாற்றிய உம்மை (2)
திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி (1)
(இதுவரை செய்த…….)
உம்சித்தம் செய்திட அழைத்தவர் நீரே
சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே (2)
சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்
தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி (1)
(இதுவரை செய்த…….)














